டல் அடிக்கும் திருப்பூர் மார்க்கெட் மற்றும் இறால் உற்பத்தி!
ம.பா.கெஜராஜ்,
இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி ஏற்றுமதி மையங்களில் ஒன்றான திருப்பூரில் ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் மௌனம் நிலவுகிறது. , புதிய வடிவமைப்புகளுக்கான துணி மாதிரிகளின் குவியல், தூசி படிந்துகொண்டிருக்கின்றது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான 50% இறக்குமதி வரிகளால் அவை பாதிக்கப்பட்டுள்ளன, இந்த வரிகள் இன்று (ஆக.27 புதன்கிழமை ) முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்தியா ஆடைகள், இறால், ரத்தினங்கள் மற்றும் நகைகள் போன்ற பொருட்களை அமெரிக்காவுக்கு பெரிய அளவில் ஏற்றுமதி செய்கிறது. ரஷ்ய எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்கியதற்காக 25% கூடுதல் வரி உட்பட விதிக்கப்பட்ட அதிக இறக்குமதி வரிகள், இந்திய பொருட்களுக்கு தடை விதித்ததற்கு இணையானது என வர்த்தக நிபுணர்கள் சொல்கின்றனர்.
இந்தியாவிலிருந்து டார்கெட், வால்மார்ட், கேப், மற்றும் ஜாரா போன்ற பிராண்டுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 16 பில்லியன் டாலர் (11.93 பில்லியன் பவுண்ட்) மதிப்புள்ள ஆயத்த ஆடைகளில் மூன்றில் ஒரு பங்கு வகிக்கும் திருப்பூரில் எதிர்காலம் என்ன என்ற கவலை அதிகமாக உள்ளது.
வாடிக்கையாளர்கள் அனைத்து ஆர்டர்களையும் நிறுத்திவைத்துள்ளதால் "செப்டம்பர் முதல், எந்த வேலையும் இருக்காது," என்று பலரும் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் தனது விரிவாக்க திட்டங்களை நிறுத்திவைக்க வேண்டியிருந்ததுடன இறக்குமதி வரிகள் விதிக்கப்படுவதற்கு முன்பு பணியமர்த்தப்பட்ட புதிய தொழிலாளர்களை வேலையில்லாமல் வைத்திருக்கவும் வேண்டியிருந்தது.
பெரும்பாலான ஏற்றுமதி நிறுவனங்களின் ஆண்டு விற்பனையில் பாதி கிறிஸ்துமஸ் விற்பனைக்கு முன்பு இந்த காலத்தில் நடக்கும் என்பதால் இந்த வரிவிதிப்பு அறிவிப்பின் நேரம் நிலைமையை மோசமாக்கியுள்ளது.
இப்போது இந்த நிறுவனங்கள் உள்நாட்டு சந்தையையும், இந்தியாவில் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையையும் நம்பியுள்ளன.
உள்ளாடைகள் தயாரிக்கும் மற்றொரு தொழிற்சாலையில், அமெரிக்க கடைகளுக்கு செல்ல வேண்டிய பல மில்லியன் டாலர் மதிப்புள்ள சரக்குகள் வாடிக்கையாளர் இல்லாமல் குவிந்துள்ளன.
"இந்தியா அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று நம்பியிருந்த நேரத்தில் அது நடக்காததால், கடந்த மாதம் முழு உற்பத்தி சங்கிலியும் முடங்கியது. இது தொடர்ந்தால் தொழிலாளர்களுக்கு சம்பளம் எப்படி கொடுப்பது என்று பல முதலாளிகள் வருத்தத்தில் உள்ளனர்.
50% இறக்குமதி வரி விதிப்பின் கீழ், 10 டாலருக்கு விற்கப்பட்ட இந்திய ஆடை அமெரிக்க வாடிக்கையாளருக்கு 16.4 டாலருக்கு கிடைக்கும் - இது சீனாவின் 14.2 டாலர், வங்கதேசத்தின் 13.2 டாலர், அல்லது வியட்நாமின் 12 டாலர்களை விட விலை அதிகம்.
இந்த நெருக்கடியின் பாதிப்பை தணிக்க, மூலப்பொருட்களுக்கு இறக்குமதி வரிகளை நிறுத்தி வைப்பது உட்பட அரசு சில நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. சந்தைகளை பன்முகப்படுத்த மற்ற நாடுகளுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளும் வேகம் பெற்றுள்ளன, ஆனால், பலர் இது மிகவும் குறைவன மிகவும் தாமதமான நடவடிக்கை என்று அஞ்சுகின்றனர்.
"அமெரிக்க வணிகர்கள் மெக்ஸிகோ, வியட்நாம், மற்றும் வங்கதேசத்திற்கு மாறுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்," என்று குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவின் அஜய் ஸ்ரீவாஸ்தவா கூறினார்.
இந்தியா - அமெரிக்கா, 50% வரி விதிப்பு, டிரம்ப்பட மூலாதாரம்,றிஹிழிமிஜி றிகிஸிகிழியிறிணி/கிதிறி ஸ்வீணீ நிமீ௴௴ஹ் மினீணீரீமீ௳
படக்குறிப்பு,சூரத்தில் வைரத் தொழிற்சாலைகள் உலகின் 90% வைரங்களை பட்டை தீட்டி, ஏறக்குறைய 50 லட்சம் பேருக்கு வாழ்வாதாரமாக உள்ளன.
அங்கிருந்து 1,200 கிமீ (745 மைல்) தொலைவில், மும்பையில் உள்ள ஒரு ஏற்றுமதி மண்டலத்தில், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வைரங்களை பட்டை தீட்டி, பேக் செய்கின்றனர். இது இந்தியாவின் 10 பில்லியன் டாலர் ரத்தினங்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி வர்த்தகத்தின் ஒரு பகுதியாகும்.
ஆனால், செப்டம்பர் மற்றும் அக்டோபரில் ௹ 3-4 பில்லியன் டாலர் மதிப்புள்ள நகைகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் காலத்தில் அமெரிக்காவின் இறக்குமதி வரிகளால் விற்பனை பாதிக்கப்படும் என்று நகை பிராண்டுகள் அஞ்சுகின்றன.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுடனான இந்தியாவின் புதிய வர்த்தக கூட்டாண்மைகள் வாய்ப்புகளைத் திறந்துள்ளன. ஆனால், அமெரிக்க சந்தையில் பல ஆண்டுகள் கஷ்டபட்டு உருவாக்கிய இடத்தை சில மாதங்களில் இழக்க நேரிடும் என்று தனது வைரம் பதித்த நகைகளில் 90%-ஐ அமெரிக்காவுக்கு விற்பனை செய்யும் ஜுவல்லரியிலர்கள் பயப்படுகிறார்கள்.
இந்தியாவின் பல இறால் விவசாயிகள், இந்த அடியைத் தாங்க மற்ற பொருட்களுக்கு மாறுவதை பரிசீலிக்கின்றனர். இந்தியா உலகின் மிகப்பெரிய இறால் ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகும், அமெரிக்கா அதன் முக்கிய சந்தைகளில் ஒன்றாக உள்ளது.
மற்ற வரிகளுடன் சேர்த்து, இறால்களுக்கு மொத்த இறக்குமதி வரி இப்போது 60%க்கு மேல் உயர உள்ளன. இது இந்தத் துறைக்கு பெரும் அடியாகும்.
"இது அமெரிக்க வியாபாரிகள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விற்பனைக்கு தயாராகும் உச்ச காலம். இங்குள்ள விவசாயிகள் தங்கள் புதிய வளர்ப்பு சுழற்சியைத் தொடங்கியுள்ளனர். டிரம்பின் இறக்குமதி வரிகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதன் விளைவாக குஞ்சு பொறிப்பக (ஹேட்சரி) உரிமையாளர்கள், இறால் லார்வா உற்பத்தியை கணிசமாக குறைத்துள்ளனர்.
"முன்பு, ஆண்டுக்கு சராசரியாக 100 மில்லியன் இறால் லார்வாக்களை உற்பத்தி செய்தோம். இப்போது, 60-70 மில்லியன் கூட அடையவில்லை," என்று உற்பத்தியாளர்கள் சொல்கிறார்கள்.
இவை அனைத்தும், அரை மில்லியன் இறால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கலாம், மேலும் 2.5 மில்லியன் பேர் மறைமுகமாக பாதிக்கப்படலாம் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே வேலை உருவாக்கத்தில் நீடித்த நெருக்கடியால் தள்ளாடும் இந்தியாவில், இந்த எண்கள் கவலையளிப்பவையாக இருக்கின்றன.
இந்த வாரம் டெல்லியில் தொடங்கவிருந்த வர்த்தக பேச்சுவார்த்தை தள்ளிவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
"இந்தியா-அமெரிக்க பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் இப்போது உள்நாட்டு மற்றும் ரஷ்யா, சீனா போன்றவற்றில் டிரம்ப் நிர்வாகத்தின் முன்னுரிமைகளை பொறுத்துள்ளது,"
ஆக அமெரிக்கா இந்தியாவுக்கு பெரிய ஆப்பை இறக்கியிருக்கிறது.

admin
