கணவனை போட்டுத்தள்ளிய மனைவி! நாடகமாடிய நிலையில் மூவர் கைது!

கணவனை போட்டுத்தள்ளிய மனைவி! நாடகமாடிய நிலையில் மூவர் கைது!

ம.டெல்லிராஜன்,

  சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு நைனாபட்டி பகுதியைச் சேர்ந்த அசேன், லாரி டிரைவரான இவர் அதே பகுதியை சேர்ந்த தஸ்தகீர் என்பவரின் மகள் நிஷா (எ) பாத்திமா. இவர்கள் இருவரும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

  இவர்களுக்கு தவுலத், சபானா, என்கிற இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

  கடந்தாண்டு ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவியின் குடும்பத்தினர் தாக்கியதில் காயமடைந்த அசேன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னர் பெரியவர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

 அப்படியிருக்க  கடந்த 1ம்தேதி அசேன் இறந்து விட்டதாக தங்கை பர்கத்க்கு தகவல் கிடைத்துள்ளது தொடர்ந்து அவர் தனது உறவினர்களுடன் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு சென்று உடலைப் பார்த்தபோது தனது அண்ணனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

  புகாரின் பேரில் எடப்பாடி காவல் ஆய்வாளர் சந்திரலேகா விசாரணை மேற்கொண்டார் இதில் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர்.

  பின்னர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்ததில் கடந்த 1ம் தேதி ஏற்பட்ட குடும்ப தகராறில் நிஷா அவரது தாய் ரஷியா, சித்தி ஷகிராபானு ஆகியோர் சேர்ந்து சேலையால் அசேனை கழுத்தை நெரித்து கொலை செய்து, அதை மறைப்பதற்காக அசேன் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மனைவி மற்றும் குடும்பத்தினர் நாடகமாடியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதையடுத்து எடப்பாடி போலீசார் வழக்குபதிவு செய்து நிஷா அம்மா ரஷியா, சித்தி ஷகிராபானு ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

 கணவனை திட்டமிட்டு கொலை செய்து விட்டு அதை மூடி மறைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.