வெற்றி பெற்ற கதிர் ஆனந்த் மக்கள் குறைகள் கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும்! தந்தை துரைமுருகன் அட்வைஸ்!

ஜி.கே.சேகரன்,
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார் அவருக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான சுப்பு லெட்சுமி சான்று வழங்கினார்.
வேலூர்மாவட்டம்,வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் 5,68,692 வாக்குகளை பெற்றார் அவரை எதிர்த்து போட்டியிட்டபாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 3,52,990 வாக்குகளை பெற்றா£.¢ இதனால் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.
அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான வே.இரா.சுப்பு லெட்சுமி வழங்கினார் அவருடன் அமைச்சர் துரைமுருகன் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார் உள்ளிட்ட திமுகவினர் உடன் இருந்தனர்.
பின்னர் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில் திமுக கூட்டணி 40 -40 தொகுதியில் அன்றைக்கும் வெற்றி பெற்றது. இன்றைக்கு எங்கள் தளபதி ஆட்சியை மக்கள் வரவேற்றிருக்கிறார்கள். அபரவிதமாக செல்வாக்கோடு தங்களை ஆட்டி அசைக்க முடியாது என்றிருந்த பிஜேபியை மக்கள் தேர்தல் மூலம் எச்சரித்துள்ளனர்.
மக்கள் விழிப்போடு இருக்கிறார்கள், பத்திரிகை உலகம் பறந்து வளர்ந்திருக்கிறது, மக்கள் நிமிடத்திற்கு நிமிடம் உஷார்படுத்தும் நிலைமை ஊடகங்களுக்கு இருப்பது பெருமைக்குரியது.
நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் பணியை தொய்வின்றி செய்ய வேண்டும். மக்களிடம் அனுகி குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும் மக்களின் தோழராக பணியாற்ற வேண்டும்.
அண்ணாமலை தோல்வி அவருடைய இஷ்டம் தோற்று போனவரை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. மக்கள் முழுக்க முழுக்க தளபதியின் ஆட்சியின் காரணமாக விருப்பத்தோடு வாக்களித்துள்ளனர். நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்தால் அனுசரனையாக செயல்படுவோம் எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்ப்போம் என கூறினார்.
தொடர்ந்து மூன்று முறை வேலூர் தொகுதியில் போட்டியிட்ட ஏ,சி,சண்முகம் மூன்று முறையும் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.