மனைவி குழந்தை கண் முன்னே இனிப்பு கடை அதிபர் குத்தி கொலை!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
ராஜபாளையம், மனைவி குழந்தை கண் முன்னே பிரபல இனிப்பு கடை அதிபர் குத்தி கொலை! ராஜபாளையம் டிஎஸ்பி பிரீத்தி தலைமையிலான காவல்துறை விசாரணை.
ராஜபாளையம் சஞ்சீவி மலை பின்புறம் சொந்த நிலத்தை பார்க்கச் சென்ற பிரபல இனிப்பு கடை உரிமையாளரை மனைவி குழந்தை கண் முன்னே 4 பேர் கொண்ட கும்பல் குத்தி கொலை செய்து தப்பி ஓடி விட்டனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், பழைய பேருந்து நிலையம் எதிரே இனிப்பு கடை வைத்து நடத்தி வருபவர் குருசாமி ராஜா என்பவரது மகன் சிவகுமார் வயது 43. இவருக்கு முதல் திருமணம் ஆகி கடந்த 10 வருடங்களுக்கு முன்பு விவாகரத்தான நிலையில் அவரது கடையில் பணியாற்றிய காளீஸ்வரி வயது 23 என்ற பெண்ணுடன் பழக்கமாகி அவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்து 8 வருடம் ஆன நிலையில் இவர்களுக்கு குரு சக்தி எனும் ஐந்து வயது ஆண் குழந்தை உள்ளது.
இனிப்பு கடை உரிமையாளர் சிவகுமார் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் முன்பு உள்ள தனது இனிப்பு கடையை எடுத்துவிட்டு, சென்னை சென்று வசித்து வந்துள்ளார். மேலும் சென்னையில் அவர் தந்தை நடத்தி வந்த விஜய் குரு டிரஸ்ட் எனும் டிரஸ்டினை அவரது தந்தை குருசாமிராஜா இறந்த பிறகு பின்பு ஸ்வீட் கடை உரிமையாளர் சிவகுமார் அதனை கவனித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் திருவிழா பண்டிகை தினங்கள் போன்ற முக்கிய தினங்களுக்கு சொந்த ஊரான ராஜபாளையத்துக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தீபாவளி பண்டிகை அன்று தனது மனைவி குழந்தைகளுடன் ராஜபாளையத்திற்கு வந்த சிவகுமார் சஞ்சீவி மலை பின்புறம் நகராட்சி குப்பை சுத்திகரிப்பு நிலையம் அருகே அவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை மாலை 5 மணியளவில் பார்வையிட மனைவி மற்றும் மகனுடன் சென்றுள்ளார். அது சமயம் சிவக்குமார் நிலத்திற்கு அருகே நான்கு இளைஞர்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனைக் கண்ட சிவகுமார் மது அருந்து கொண்டிருந்தவுடன் இங்கு மது அருந்தக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இடத்தைப் பார்வையிட்டு சிவகுமார் சுமார் மாலை 6-30 மணி அளவில் தனது மனைவி குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்ப தயாராகிக் கொண்டிருந்தார்.
அது சமயம் மது அருந்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட 4 மர்ம நபர்கள் மீண்டும் அப்பகுதிக்கு வந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த சிவகுமாரின் இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்து கீழே தள்ளி சிவகுமார் கழுத்து பகுதியில் ஐந்து இடங்களில் கத்தியால் குத்தினார்கள். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்து சம்பவ இடத்திலேயே சிவகுமார் பலியானார்.
கணவன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்ட மனைவி காலீஸ்வரி உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் ராஜபாளையம் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பெயரில் சம்பவத்திற்கு சென்ற காவல்துறையினர் மற்றும் ராஜபாளையம் டிஎஸ்பி பிரீத்தி சம்பவ இடத்திற்கு வந்து சிவகுமார் உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிவக்குமார் மது அருந்திய நபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கொல்லப்பட்டாரா, அல்லது வேறு ஏதேனும் முன்பகையால் கொல்லப்பட்டாரா எனும் கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவி மற்றும் ஐந்து வயது குழந்தை கண் முன்னே பிரபல இனிப்பு கடை உரிமையாளர் சிவகுமார் குத்தி கொலை செய்யப்பட்டது ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.