அடுத்தவர் பைக்கை கூலாக “டோ” செய்த வாலிபர்கள்...பிடிபட்டவருக்கு தர்ம அடி!

கு.அசோக்,
ஆலங்காயத்தில் இருசக்கர வாகனத்தை களவாடி சென்ற இளைஞரை கம்பத்தில் கட்டி வைத்து போலீசில் பிடித்துக் கொடுத்த பொதுமக்கள்.
திருப்பத்தூர் மாவட்டம்,ஆலங்காயம் அடுத்த மிட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. இவர் தனது இரு சக்கர வாகனத்தில் ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகதிற்கு வந்துள்ளார்.
அப்போது அங்கு தனது பணியை முடித்து கொண்டு ஒரு டீ கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றபோது அங்கு வந்த 2 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை அபேஸ் செய்துவிட்டனர்.
அதை பார்த்த சங்கீதா, கூச்சலிடவே அங்கிருந்தவர்கள் இரு சக்கர வாகனம் மூலம் சுமார் 5 கிமீ தூரம் துரத்தி சென்று நிம்மியம்பட்டு பகுதியில் அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் அந்த இளைஞர்களை பிடிக்க முயன்றனர்.
அப்போது ஒரு இளைஞர் தப்பிட்டார். மற்றொரு இளைஞரான வளையாம்பட்டு, ராஜீவ் காந்திநகர் பகுதியை சேர்ந்த உதயன் என்பவரை பொதுமக்கள் பிடித்து அங்குள்ள ஒரு கம்பத்தில் கட்டி வைத்து போலிசாரை வரவழைத்து ஒப்படைத்தனர்.
பின்னர் அந்த இரு சக்கர வாகனத்துடன் இளைஞரை ஆலங்காயம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தப்பி ஓடிய மற்றொரு இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.