பக்தர்களை அடைத்து வைத்து பாடாய்படுத்திய பெண் அலுவலர்! வழக்கில் வசமாக சிக்குகிறார்!!

ஜி.கே.சேகரன்,
சித்ரா பௌர்ணமியன்று கோவிலுக்கு சென்ற சுமார் 750 -க்கும் மேற்பட்ட பக்தர்களை கோட்டை உள்பகுதியில் அடைத்து வைத்து பூட்டிய தொல்லியல்துறை அலுவலர், காவல்துறையுடன் வாக்குவாதம் பதட்டம் - கோட்டையை பராமரிக்க துப்பில்லை கோவில் வழிபாட்டை தடுப்பதா என கேள்வி.
வேலூர்மாவட்டம், வேலூர் கோட்டை உள்பகுதியில் ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த கோட்டை தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் உள்ளது. ஆனால் கடந்த 1981 ஆம் ஆண்டு முதல் பொதுமக்களால் வழிபாடு நடத்தப்பட்டு வரும் இந்த ஆலயத்தில் தினசரி பூஜைகளும், அபிஷேகங்களும் நடத்தப்பட்டு வருகிறது. விசேஷ தினங்களில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டுவருவது வழக்கம்.
அப்படியிருக்க நேற்று முன்தினம் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் கோவிலுக்கு சென்று சுவாமி வழிபாடு நடத்தினார்கள். இந்த நிலையில் எந்த வித முன் அறிவிப்புமில்லாமல் கோவில் உள்ளே பக்தர்கள் சுமார் 750 -க்கும் மேற்பட்டோரை உள்ளே வைத்து கோட்டையின் கேட்டை இழுத்து மூடி பூட்டு போட்டுவிட்டனர். கோட்டையின் உள்ளே இருந்த பக்தர்கள் வெளியில் செல்ல வேண்டுமென கேட்டும் அவர்களை வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை.
மேலும் கோட்டையின் உள்ளேயும் யாரையும் அனுமதிக்கவில்லை. அதற்காக போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அப்போது பக்தர்கள் தங்களை தடுத்த போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், பக்தர்கள் எங்களை வெளியில் அனுப்புங்கள் என்று கொஷமிட்டனர்.
அதன் பின்னர், காவல்துறையினர் பொதுமக்கள் சென்று வர அனுமதித்தனர். அதுவும், சுமார் முக்கால் மணிநேரமாக பக்தர்கள் சென்று வர அனுமதித்தனர்.
தாமதித்திருந்தால் அங்கு பெரும் பிரச்சனை ஏற்ப்பட்டிருக்கும்.
இந்த சம்பவம் குறித்து வேலூர் பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஜலகண்டீஸ்வரர் தருமஸ்தாபன நிர்வாகிகள் ஆகியோர் ஒருங்கிணைந்து கூட்டம் ஒன்றை நடத்தினார்கள். கூட்டத்தின் முடிவில் பக்தர்களை சிறை வைத்து தொல்லியல் துறை அதிகாரிகள் மீது காவல்துறையில் புகார் அளிப்பது எனவும், பின்னர்¢ தொல்லியல் துறை அலுவலர் அகல்யா மீதுமாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிப்பது எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் துறை இக்கோட்டையை சரியாக பராமரிப்பதே கிடையாது ஆனால் கோட்டையில் நடக்கும் வழிபாட்டை எப்படியாவது தடுக்க வேண்டுமென முழு மூச்சில் அதிகாரி செயல்படுகிறார் சுமார் 5 கோடி மதிப்பில் செய்யப்பட்ட புதிய தங்கதேர் கோவிலுக்கு வெளியில் உள்ளது. அதற்கான இடத்தை ஒதுக்காததால் மழையிலும் வெய்யிலிலும் பாழடைந்து வருகிறது.
மேலும் கோட்டை முழுவதும் குப்பையும் கூலமுமாக காட்சியளிக்கிறது கோட்டையை சுத்தம் செய்வது கிடையாது இந்த சம்பவம் குறித்து சென்னையில் உள்ள தொல்லியல் துறை உயரதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்ட போது பக்தர்களை சிறை வைத்த சம்பவம் தனக்கு தெரியாது தாங்கள் சொன்ன பிறகு தான் எனக்கு தெரியவருகிறது என கூறினார்.
சரித்திர புகார் வாய்ந்த இந்த கோட்டையை பராமரிக்க துப்பில்லாத தொல்லியல் துறை, ஜலகண்டீஸ்வரர்கோவில் வழிபாட்டை தடுக்க வேண்டுமென முழு நோக்கத்துடன் செயல்படுவது கண்டிக்கதக்கது என பொதுமக்கள் பொங்கினார்கள்.
முதல்ல அந்தம்மாவுக்கு.....,அதாங்க அந்த அலுவலருக்கு கோட்டை கோவிலின் தற்கால வரலாற்றை தெரியப்படுத்தனும். குறிப்பாக வழக்கு வாய்தா...உள்ளிட்டவைகளை அவரது பார்வைக்கு அளிக்கவேண்டும். அதே போல் இதை வைத்து குளிர்காய நினைப்பவர்களிடம் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஏன்னா வெள்ளையர்களிடமிருந்து மீட்ட கோட்டைக்குள் கோவிலை நடைமுறைப்படுத்திட எடுத்துக்கொண்ட போராட்டங்கள் ஏராளம், அதெல்லாம் அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை ராஜா...!