பல்லை இளித்த அரசு கட்டிடம்! காட்பாடியில் அவலம்!! சட்டமன்ற குழு அதிர்ச்சி! அதிகாரிகளை கடிந்த ஆட்சியர்!

ஜி.கே.சேகரன்,
காட்பாடி வட்டம், சேர்காட்டில் கட்டிடம் கட்டி சில மாதங்களில் ஆங்காங்கே இடிந்து விழுந்து நீர் கசிவு ஏற்படுவதை சட்டமன்ற உறுதிமொழி குழு கண்டுபிடித்து, இக்கட்டிடத்தின் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை கேட்டு கொண்டனர்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் தலைமையில் குழு உறுப்பினர்கள் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் நடைபெற்று வரும்திட்டப் பணிகளின் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்கள்- திருவள்ளூவர் பல்கலைக்கழக மாணவியர் விடுதி ஆங்காங்கே புதிய கட்டிடம் கட்டி சில மாதங்களிலேயே திறப்பு விழா கூட செய்யாத நிலையில் நீர் கசிவும் இடிந்து விழும் நிலை உள்ளதால் சட்டமன்ற உறுதி மொழி குழு அதிர்ச்சி.
வேலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுதிமொழி குழுவிற்கு பொதுமக்கள் அளித்த பொது பிரச்சனைகள் குறித்த மனுக்கள் மீது பரிந்துரை செய்த வளர்ச்சிதிட்டப் பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து நேரில் ஆய்வு நடத்தப்பட்டது.
அக்குழுவின் தலைவர் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் தலைமையில், உறுப்பினர்கள் சேலம் (மேற்கு) தொகுதி சட்டமன்ற உறுப்பினர்,அருள்,அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர், மோகன் ஆகியோர் இன்று பல்வேறு பகுதிகளில் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இக் குழுவானது வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனையில் ரூபாய் 150 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு, கட்டுமான பொருட்களான செங்கல், சிமெண்ட் பூச்சுகள் போன்றவைகள் தரமான உள்ளதான என ஆய்வு செய்தனர்.
மேலும் கட்டுமான பணிகளை குறிப்பிடப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.அதனை தொடர்ந்து வேலூர் கோட்டை மைதானத்தில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தை பார்வையிட்டு அருங்காட்சியகத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்தார்.
அருங்காட்சியகத்தை விரிவுபடுத்துவதற்காக ஒன்றிய அரசின் கட்டுபாட்டில் உள்ள தொல்லியல் துறையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
அரசாணை வெளியிடப்பட்டவுடன் உடனடியாக அருங்காட்சியகம் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.பின்னர் வேலூர் அப்துல்லாபுரத்தில் ரூ.31.06 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மினி தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டுமான பணிகளை பார்வையிட்டு, கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் செங்கல், சிமெண்ட் பூச்சுகள் போன்றவைகள் தரமான உள்ளதான என ஆய்வு செய்தார். மேலும் கட்டுமான பணிகளை குறிப்பிடப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து அணைக்கட்டு வட்டம் ,ஊசூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் சுகாதார மைய கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்போது செங்கல் மற்றும் கட்டுமான பணிகள் தரமற்ற முறையில் உள்ளது குறித்து கேள்வி எழுப்பி சுட்டிகாட்டினார்கள்.
பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டு, மருந்துகளின் இருப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும் சிகிச்சைக்கு வந்த பொதுமக்களிடம் சுகாதார நிலையத்தில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் காட்பாடி வட்டம் சேர்க்காட்டில் அமைந்துள்ள தமிழக அரசின் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ரூபாய் 29 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்கள் மற்றும் மாணவ, மாணவியர் விடுதிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கட்டிடம் கட்டி சில மாதங்களில் ஆங்காங்கே இடிந்து விழுந்து நீர் கசிவு ஏற்படுவதையும் சுட்டிகாட்டினார். இக்கட்டிடத்தின் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை கேட்டு கொண்டார். அப்போது மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பொதுப்பணித்துறை இளநிலைய பொறியாளர் கடிந்துகொண்டார்.
¢ பின்னர் வேலூர் மாநகராட்சி 1வது மண்டலம் காட்பாடி, வெள்ளக்கல் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வேலூர் சத்துவாச்சாரி பகுதி 3 ல் ரூபாய் 16.77 கோடி மதிப்பில் தரைதளம் மற்றும் 9 தளங்களுடன் கட்டப்பட்டு வரும் 48 அலகுகளுடன் கூடிய சர்வீஸ் அபார்ட்மெண்ட் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த சர்வீஸ் அபார்ட்மெண்ட் கட்டுமான பணிகளை சம்பந்தபட்ட அரசு துறைசார்ந்த பொறியாளர்கள் முறையாக கண்காணிக்க வேண்டுமென குழு அறிவுறுத்தியது.இந்த ஆய்வின்போது, சட்டமன்ற பேரவை இணை செயலாளர் . கருணாநிதி, மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.பானுமதி, திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ஆறுமுகம், பதிவாளர் செந்தில் வேல்முருகன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் கணேசன், செயற்பொறியாளர் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.