சரத்குமார் கட்சி பாஜகவுடன் கூட்டு! மூன்றாவது முறை மோடி பிரதமாராக தேர்ந்தெடுக்க செயல்பட போவதாக அறிக்கை!

சரத்குமார் கட்சி பாஜகவுடன் கூட்டு! மூன்றாவது முறை மோடி பிரதமாராக தேர்ந்தெடுக்க செயல்பட போவதாக அறிக்கை!

  உ.சசிகுமார்,

  நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக உடன் சரத்குமார் பேச்சுவார்த்தையை நடத்தி வந்த நிலையில்  குறிப்பிடத்தக்கது. அவர் பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளார். ஆக இந்த தேர்தலில் சரத்குமாரின் இந்திய சமத்துவ மக்கள் கட்சி தாமரையில் களம் காணும்.

 இந்த கூட்டணி குறித்து சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,"பாஜகவின் தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் பிப்ரவரி 28-ம் தேதி என்னை நேரில் சந்தித்து, மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைப்பது குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.  அதில் ஒருமித்த கருத்துகள் உடன்பட்டது.

 இந்நிலையி, நேற்று (05.03.2024) மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பாஜக தமிழக பொறுப்பாளர் அரவிந்த்மேனன் ஆகிய மூவரும் குழுவாக வந்து என்னை சந்தித்து கூட்டணி குறித்து மீண்டும் பேசினார்கள். இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தேறியது.

   அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்டக்குழு, மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஏற்கெனவே எனக்கு மக்களவைத் தேர்தலில் முடிவெடுக்கும் அதிகாரத்தினை வழங்கி, எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று உத்தரவாதம் அளித்தது.

   அதன் அடிப்படையில், நாடு வளம் பெற, ஒற்றுமையுணர்வு ஓங்கிட, மீண்டும் நல்லாட்சி அமைந்திட மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பாரத பிரதமராக தேர்ந்தெடுக்க பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளேன். மற்ற விபரங்களை இன்னும் ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

  ஆனால் அதிமுகவுடன் ஏன் கூட்டணி காணவில்லை என்பதைப்பற்றி அவர் மூச் விடவில்லை.