தேர்தல் ஆணைய நடவடிக்கையால் கடந்த முறை வெற்றி வாய்ப்பு பறிபோனது! ஏ.சி.சண்முகம் பேட்டி!

தேர்தல் ஆணைய நடவடிக்கையால் கடந்த முறை வெற்றி வாய்ப்பு பறிபோனது! ஏ.சி.சண்முகம் பேட்டி!

 ஜி.கே.சேகரன்,

  கடந்தமுறை தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிக்கு முன்னர் என் தொகுதி தேர்தலை நிறுத்தினார்கள், தற்போது குற்றச்சாட்டிற்கு உள்ளான அந்த வேட்பாளரை ஏன் தகுதி நீக்கம் செய்யவில்லை? புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பேட்டி!

 நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி வேலூர் மக்களவை தொகுதியில் கடந்த ஆறு மாதங்களாக ஒன் மேன் ஷோ நடத்தப்பட்டு வந்தது.

 ஆனால் தற்போது களத்தில் திமுக இறங்கிய பின்னர் சற்றே களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது.

 இந்த தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் சிட்டிங் எம்.பி.யாக இருக்கிறார். இம்முறையும் அவருக்கே சீட்டு வழங்கப்பட்டிருக்கிறது.

 கடந்த முறை அவரை எதிர்த்து போட்டியிட்டு 8 ஆயிரத்து சில்லரை வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தற்போதும் மீண்டும் வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதே போல் அதிமுக சார்பில் டாக்டர் பசுபதி என்பவரை போட்டியிட வைத்திருக்கிறார்கள்.

 இந்நிலையில், வேலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் வேலூர் வேட்பாளரான ஏ.சி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இதில் பாமக மாவட்ட  செயலாளர் இளவழகன், மாநில துணை தலைவர் என்.டி.சண்முகம்,அமமுக பார்த்தீபன், தமாக மூர்த்தி, பாஜக வெங்கடேசன்,உள்ளிட்ட திரளான தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்றனா.

 ¢ இக்கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது

 பின்னர் புதிய  நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில் கடந்த முறை வெற்றி பெற்ற வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தொகுதி மக்களுக்காக எதையுமே செய்யவில்லை.  வாணியம்பாடி ரயில்வே மேம்பாலமும், ரெட்டிதோப்பு பாலமும் கட்டிக்கொடுப்பதாக சொல்லி அதை செய்யவே இல்லை.

  மேலும் தோற்றாலும் ஜெயித்தாலும் நான் இந்த தொகுதி மக்களுக்காக பல நன்மைகளை செய்து வருகிறேன். பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வாக்களிப்பார்கள். சிறுபான்மையினர் அதிக அளவில் எங்களுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனா.¢ கடந்த முறை நான் போட்டியிட்டேன் கடைசி நேரத்தில் தேர்தல் நிறுத்தப்பட்டதால் பாதிப்பு ஏற்பட்டது தோல்வியை அடைந்தேன்.

  ஆனால் பணக் குற்றச்சாட்டுக்கு ஆளான வேட்பாளர் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  தற்போதும் அவர் போட்டியிடுகிறார் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அவரை தகுதி நீக்கம் செய்யவில்லை தேர்தலை அப்போதே நடத்தியிருந்தால் நான் வெற்றி பெற்று இருப்பேன் தேர்தல் சரியாக நடத்தப்படவில்லை என கூறினார்.