பைக் மீது மோதிய பேருந்து! சாலைமறியல்!

கு.அசோக்,
வளைவில் திரும்பிய இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி. இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதிய சிசிடிவி காட்சி வெளியானதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் மிட்டூர் வரை செல்லும் தனியார் பேருந்து நேதாஜி நகர் பகுதியில் சென்ற போது அங்குள்ள வளைவில் இருசக்கர வாகனத்தில் அதே பகுதியை சேர்ந்த ஷாநவாஸ் என்பவர் வந்தார்.
அப்போது அவர் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஷானாவாஸ் கை மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு படுகாயமடைந்துள்ளார்.
சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் இதனை அறிந்த அப்பகுதி மக்கள் இளைஞரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்தை நிறுத்தி ஓட்டுநரை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த வாணியம்பாடி நகர போலீசார் மறியலில் ஈடுபட முயன்ற அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விபத்துக்கு காரணமான பேருந்து ஓட்டுனர் பள்ளவல்லி பகுதியை சேர்ந்த ராஜா என்பவரை கைது செய்து பேருந்து பறிமுதல் செய்யபட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.