தேக்கு மரங்களை வெட்டி சென்ற விவகாரம்! மரமே இல்லை என்று சொல்ல வைத்த அதிகாரிகள்!

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி அருகே ஊரக வளர்ச்சித்துறைக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்து தேக்கு மரங்களை வெட்டிச்சென்ற மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் ஆய்வு செய்த வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட போது,கேள்வியிற்கு பதிலளிக்கமால் அங்கிருந்து அதிகாரிகள் நழுவிச்சென்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை ஊராட்சிக்குட்ப்பட்ட பழத்தோட்டம் பகுதியில் ஊரக வளர்ச்சித்துறைக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் பல வகையான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு அந்த தோட்டத்தில் இருந்து 2 தேக்கு மரங்களை மர்மநபர்கள் வெட்டி கடத்திச் சென்றுள்ளனர், இச்சம்பவம் குறித்து அப்பகுதியை சேர்ந்¢தவர்கள் வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதி மற்றும் உதவி பொறியாளர் சுதாகர் ஆகியோர் அங்கு ஆய்வு செய்து விசாரணை மேற்க்கொண்டனர். அப்போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பலர், அதிகாரிகளிடம் மரத்தை வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதே நேரத்தில் அங்கு வந்த மற்றொரு தரப்பினர் இங்கு தேக்கு மரம் இல்லை, என கூறியதால், இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு கேள்வி எழுப்பியவர்களுக்கு பதிலளிக்காமல், அதிகாரிகள் அங்கிருந்து நழுவிச்சென்றனா.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இதுகுறித்து ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் கேட்டபோது,ஆலங்காயம் ஒன்றிய பொதுநிதியிலிருந்து, 9 லட்சம் மதிப்பில் ஊரக வளர்ச்சிதுறைக்கு சொந்தமான இடத்தில் நெற்களம் அமைக்க இடத்தை தூய்மை படுத்தியதாகவும், அரசுக்கு சொந்தமான இடத்தில் தேக்குமரம் வெட்டப்பட்டது குறித்து, அங்கு அக்கம்பக்கம் உள்ள பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு, இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
ஓ...அப்படின்னா இவருக்கு தெரிந்துதான் குத்தகைதாரர் தேக்கு மரங்களை வெட்டி எடுத்துச் சென்றார் போலும்.