போலி 2000 ரூபாய்! அது டம்மி? சினிமாவுக்காக என்று முடித்துக்கொண்டனர்!

ஜி.கே.சேகரன்,
சென்னையைச் சேர்ந்த ஜெயசுந்திரன் மகன் அபி நரசிம்மன் (52) இவர் தேன் வியாபாரம் செய்து வருகிறா£.¢மேலும் இவருக்கு சொந்தமாக மேட்டூரில் அலுவலகம் உள்ளது. இதன் காரணமாக தினம் தோறும் தேன் வாங்கிக் கொண்டு மேட்டூரிலிருந்து சென்னைக்கு சென்று வருவது வழக்கம்.
இந்த நிலையில் வழக்கம் போல் அபிநரசிம்மன் தனது இண்டிகோ காரில் மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தா£.
¢ அப்போது வெலக்கல்நாத்தம் பைனப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரில் இருந்து புகை வந்துள்ளது இதனால் சுதாரித்துக் கொண்ட அபி நரசிம்மன் உடனடியாக காரை விட்டு கீழே இறங்கி உள்ளார்.
பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் கார் தீ பற்றி எறிந்தது. இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு அபி நரசிம்மன் தகவல் தெரிவித்தார்.
அங்கு வந்த நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினர் தீயை முழுவதுமாக அனைத்தனர்.மேலும் நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.தேசிய நெடுஞ்சாலையில் கார் தீ பற்றி எறிந்ததால் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தீப்பிடித்த வாகனத்தில் கட்டு கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அது பற்றி சந்தேகம் அடைந்த போலிசா அபி நரசிம்மனை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.
கடைசியில் அது சினிமாவுக்காக பயன்படுத்தப்பட்ட டம்மி ரூபாய் என்று பிரச்சனையை முடித்து வைத்திருக்கிறார்கள்.
என்ன செய்வது நம்பித்தானே ஆகனும்.