அரசு மருத்துவமனையை மூடிவிடலாமா? தெனாவட்டு அதிகாரி!

அரசு மருத்துவமனையை மூடிவிடலாமா? தெனாவட்டு அதிகாரி!

ஜி.கே.சேகரன்,

அரசு மருத்துவமனையில் கழிவுநீரை சுத்திகரிக்காமல் ஏரியில் விடுவதால் நீராதாரம் பாதிப்பதாக சுற்றுவட்டார பகுதி மக்கள் முற்றுகையிட்டு ஆர்பாட்டம் சாலைமறியலில் ஈடுபட முயற்சி..தெனாவட்டாக பேசிய அதிகாரிகளுடன் வாக்குவாதம்

 வேலூர்மாவட்டம்,வேலூர் அடுக்கம்பாறையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையானது செயல்படுகிறது. இந்த மருத்துவமனையின் நர்சிங்க் கல்லூரி மருத்துவக்கல்லூரி மற்றும் விடுதி கழிவுநீர் நோயாளிகளில் கழிவுநீர் போன்ற அனைத்து கழிவுநீரும் அருகிலுள்ள ஏரியில் விடப்படுகிறது.

   நீரை சுத்திகரிப்பு செய்யாமல் ஏரியில் விடுவதால் சுற்றுசூழல் பாதிக்கபடைவதுடன் அப்பகுதியில் கிணறுகளில் உள்ள குடிநீரும் மாசடைகிறது.அதிக அளவு நோயும் மக்களுக்கு ஏற்படுகிறது.

  இம்மருத்துவமனையை கட்டிய நாளிலிருந்து இந்த கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றுவது குறித்து பொதுமக்கள் தாங்கள் பாதிகபடுவதாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

  இந்த நிலையில் அடுக்கம்பாறை பொதுமக்கள் இந்த கழிவுநீரை வெளியேற்றவிடாமல் மண்ணை கொட்டி தடுத்ததுடன் கழிவுநீரை சுத்திகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள்.

  தகவல் அறிந்து வந்த வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஒருமாதகாலம் அவகாசம் அளியுங்கள் ரூ.15 கோடியில் கழிவுநீர் முழுவதும் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்க அரசின் பரிந்துரைக்கு சென்றுள்ளது எனவே கொஞ்சம் பொறுத்துகொள்ளுமாறு பேச்சுவார்த்தையை நடத்தினார்கள்.

  அப்போது ஒரு அதிகாரி தண்ணீரை வெளியிடாமல் இருக்க ஆஸ்பத்திரியை மூடிவிடலாமா என்று தெனாவட்டாக கேட்டதும் பொதுமக்கள் கொதிப்படைந்தனர்.

 பின்னர் அங்கிருந்த அதிகாரிகளின் சமரசத்தை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர் இம்மக்கள் கடந்த 20 ஆண்டுகாலமாக கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய வேண்டுமென தொடர்ந்து போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.