பாலியல் தொல்லை - கட்டபஞ்சாயத்து செய்த ஆலய நிர்வாகிகள்! காரி உமிழும் பெற்றோர்!

ஜி.கே.சேகரன்,
காவல் நிலையம் எதிரே உள்ள ஆலயத்தில் மூன்றரை வயது சிறுமிக்கு பத்தாவது படிக்கும் மாணவன் பாலியல் தொல்லை ஏற்படுத்திய நிலையில் அதை நிர்வாகிகள் மூடி மறைக்க கட்டபஞ்சாயத்து செய்துள்ளார்கள். ஆனாலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
வேலூர் மாவட்டம், காட்பாடி காவல் நிலையம் மற்றும் தேவாலயம் எதிரி எதிரே உள்ளது. அந்த தேவாலயத்தில் பலர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 1-ம் தேதி அங்கு பணிபுரிவரின் பெண் குழந்தை (மூன்றரை வயது) தேவாலயத்தில் விளையாடிக் கொண்டுள்ளது.
அங்கு பணிபுரியும் மற்றொரு ஊழியரான ஜான்சன் என்பவரின் மகன் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்.
அந்த மாணவன் பெண் குழந்தையை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் பற்றி குழந்தையின் பெற்றோர்களுக்கு தெரியவந்ததும் அவர்கள் பதறினர்.
இந்த விஷயத்தை பெரிது படுத்தாமல் இருக்க தேவாலயத்தின் குருசேகர குழுவினரிர் அவசரமாக கூடி விவாதித்தனர். இந்நிலையில் காமுகனுக்கு ஆதரவாக நான்கு நிர்வாகிகள் செயல்பட்டிருக்கிறார்கள்.
இதை அறிந்த பெற்றோர் அந்த நிர்வாகிகள் காரி உமிழாத குறையாக வசைபாடினார்களாம்.
இந்த விவகாரம் காவல் நிலையத்துக்கு எட்டியவுடன், அவர்கள் நேர்மையாக விசாரித்திருக்கிறார்கள். எந்த பிரச்சனை என்றாலும் போலீசில் தானே தெரிவிக்கவேண்டும். நீங்களே கட்டபஞ்சாயத்து செய்து கொள்ளக்கூடிய குற்றமா இது என்று கண்டித்தத்துடன், பெற்றோரிடம் புகார் பெற்று வழக்கு பதிவு செய்தனர்.
சமீப காலமாக சில டுபாக்கூர் ரவுடிகள் தன்னை பெரிய ஆளாக காட்டிக் கொண்டு பலவேறு கட்டபஞ்சாயத்து செய்வதும், மாவட்ட காவல் அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி பலரை மிரட்டுவதுமாக உள்ளார்கள்.
சம்மந்தப்பட்ட நிர்வாகம் அது போன்ற டுபாகூர்களை அடையாளம் கண்டு ஒதுக்கினால் நலம். ஏனென்றால் அது போன்ற நபரின் பெயர் காவல் துறை உளவுத்துறையின் பட்டியலில் சென்னை வரைக்கும் உள்ளது.
உறுதிப்படுத்திக் கொள்ள விசாரித்து தெரிந்துக் கொள்ளவும்.
கமிட்டியை சேர்ந்தவர்களால் பஞ்சாயத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் பெண் குழந்தையின் பெற்றோர் காட்பாடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
மூன்றரை வயது குழந்தைக்கு பத்தாவது படிக்கும் மாணவன் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்படி சிறுவனின் தந்தை ஜான்சன் ஏற்கனவே இரண்டு மனைவி சர்ச்சை தொடர்பாக நிர்வாகத்தினரால் ஆறு மாதம் சஸ்பெண்டு செய்யப்பட்டவர். தற்போது மீண்டும் அவர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.