குடிநீர்கால்வாயில் மருத்துவ கழிவுகளை கலக்கும் சபிதா கல்லூரி! அமைச்சர் துரைமுருகன் போராடப்போகிறாராம்!

குடிநீர்கால்வாயில் மருத்துவ கழிவுகளை கலக்கும் சபிதா கல்லூரி! அமைச்சர் துரைமுருகன் போராடப்போகிறாராம்!

ஜி.கே.சேகரன், 

கிருஷ்ணா குடிநீர் வரும் கால்வாயில் சவிதா மருத்துவ கல்லூரியின் கழிவுகளை கொட்டுகிறார்கள் இதனால் பாதிப்பு ஏற்படுகிறது. மக்களுடன் நானே தலைமை தாங்கி போராட்டம் நடத்துவேன் - மத்திய அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த நாடாளுமன்றத்தில் திமுக வலியுறுத்தும் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி

 வேலூர்மாவட்டம், காட்பாடி சேனூரில் தீபாவளியை முன்னிட்டு முதியோர் உதவித்தொகை பெரும் பயனாளிகளுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கும் இலவச வேட்டி சேலை வழங்கும் விழா நடைபெற்றது.

 மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி தலைமையில் நடந்த இதில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வேட்டி சேலை வழங்கினார்.

  பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் மத்திய அரசு ஜாதி வாரிகனக்கெடுப்பை நடத்த மறுக்கின்றனர். இன்னும் வாய்ப்பிருக்கிறது நாடாளுமன்றத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த திமுக வலியுறுத்தும். சென்னைக்கு குடிநீரை வழங்கும் கிருஷ்ணாநதியிலிருந்து கால்வாய் வெட்டி செம்பரம்பாக்கம் ஏரிக்கு கொண்டு வருகிறோம்.

  சவிதா என்ற தனியார் மருத்துவ கல்லூரி அந்த கால்வாயில் மருத்துவ கழிவுகளை கால்வாயில் கொட்டுகின்றனர் இதுகுறித்து துறையின் சார்பில் வழக்கு தொடர்ந்துள்ளோம். ஆனால் பிடிவாதமாக அவர்கள் கழிவை கொட்டுகின்றனர் அந்தந்த பகுதி மக்கள் ஒத்துழைப்பு தந்தால் நானே தலைமை தாங்கி போராட்டம் நடத்துவேன் என்று சொன்னார் அமைச்சர்.