வேலூர் சிருஷ்டி பள்ளியில் ரவுடியிசம்! மிரட்டப்பட்ட நிருபர்கள்!

வேலூர் சிருஷ்டி பள்ளியில் ரவுடியிசம்! மிரட்டப்பட்ட நிருபர்கள்!

கு.அசோக்,

 காட்பாடியில் மூன்று பள்ளி மாணவர்கள் அதே பள்ளியில் பயிலும் மாணவனை சரமாரியாக தாக்கியதில் மூக்கு தண்டுவடம் உடைந்து மயக்க நிலை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.  பள்ளி நிர்வாகம் மூடி மறைக்க முயற்சி - பள்ளிகல்வித்துறை அமைச்சர் நேற்று வேலூர் பள்ளிகளில் ஆய்வு செய்த நிலையில் பள்ளியினுள் மாணவர்கள் மோதல் பெற்றோர்கள் அதிர்ச்சி.

 வேலூர்மாவட்டம்,காட்பாடி கஸ்தூரி பாய் தெருவை சேர்ந்தவர் மோகன் இவர் மத்திய ரிசர்வ் போலீசில் பணியாற்றி வருகிறார் இவரது மகன் ரஞ்சித்.

 இவர் பிரம்மபுரத்தில் சிருஷ்டி என்ற தனியார் பள்ளியில் பிளஸ் -2 படித்து வருகிறார்.  நேற்று பள்ளி கேண்டீனில் ரஞ்சிதை அதே பள்ளியில் பயிலும் மூன்று மாணவர்கள் சரமாரியாக தாக்கினர்.

  இதில் ரஞ்சித்துக்கு மூக்கு தண்டுவடம் உடைந்து ரத்தம் கொட்டியதில் அவர்¢ மயங்கி விழுந்தார்.

 எனவே மாணவர்  இராணிப்பேட்டை சி.எம்.சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

 பின்னர் அந்த மாணவருக்கு சுய நினைவு திரும்பியது.

 இதுகுறித்து காட்பாடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து சிருஷ்டி பள்ளிக்கு நேரடியாக சென்று  விசாரணை மேற்கொள்ளபடுகிறது.

 இதனிடையே பள்ளி மாணவர் மயங்கி விழுந்து கவலைக்கிடமான நிலையிலும் பள்ளி நிர்வாகம் இந்த நிகழ்வை மூடிமறைக்கவே முழு முயற்சி மேற்கொண்டனர்.

  செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களும் மிரட்டப்பட்டனா. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று காட்பாடி மேல்மொனவூர் கேவிகுப்பம் குடியாத்தம் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டிருக்கும் நிலையிலேயே தனியார் பள்ளியில் மாணவர்களிடையே மோதல் நடந்துள்ளது.

 இந்த சம்பவம் பெற்றோர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பள்ளி கல்வித்துறை எதிர்காலத்தில் இது போன்று பள்ளிகளில் மாணவர்களிடையே மோதல் ஏற்படாமல் தடுக்க வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

    சென்னையிலும் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஒரு மாணவன் கொல்லப்பட்ட நிகழ்வும் வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பள்ளிகளில் மாணவர்களிடையே மோதல் அதிகரித்துள்ளது வேதனைக்குரியதாகியுள்ளது.

 காட்பாடி பகுதியில் உள்ள குறிப்பிட்ட கல்வி நிலையம் தவிர மற்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கிடையே ஒழுக்கக்கேடான நிகழ்வுகளை பார்க்க முடிகிறது.

 அதிலும் வெளிமாநிலத்தவரின் அட்டகாசம் உள்ளூர் கலாச்சாரத்தை கெடுத்துவருகிறது.

 இதெல்லாம் போலீசுக்குக்கூட தெரியும்... பாவம் அவுங்க என்ன பண்ணுவார்கள்?