"ரிடர்ன் டு பொலிடிக்கல்" ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்!

ம.பா.கெஜராஜ்,
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நோக்கத்துடன் தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் அரசியலுக்கு திரும்புகிறார்.
அதற்கு வசதியாக புதுச்சேரி துணை நிலை ஆளுநா, மற்றும் தெலுங்கானா ஆளுநர்¢ பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பிவைத்திருக்கிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் திமுவின் கனிமொழியை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் பாஜக சார்பில் போட்டியிட்டார். ஆனால் தமிழிசை தோல்வியை தழுவினார். இதனைத்தொடர்ந்து பாஜக அரசு அமைந்தவுடன் 2019-ம் ஆண்டு தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தராஜன் நியமிக்கப்பட்டார்.
கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
தற்போது நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மக்களைவை தேர்தலில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படும் நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக முடிவு எடுத்து தனது ராஜினாமா கடித்தத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளார். தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் இரண்டு பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்துள்ளார்.
ஆகவே அவர் புதுச்சேரியில் அல்லது வடசென்னை போட்டியிடலாம் என கூறப்படுகிறது.
இவர் ஏற்கனவே 2009-ம் ஆண்டு மக்களைவை தேர்தலில் வடசென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டுள்ளார். 2006, 2011, 2016 சட்டமன்ற தேர்தல்களிலும் அவர் போட்டியிட்டுள்ளார் என்பது நினைவு கூறத்தக்கதாகும்.