அணைகட்டில் உள்ள புரதான கோவில்கள் சீரமைப்பு பணி! அமைச்சர் சேகர் பாபு ஆய்வு!

அணைகட்டில் உள்ள புரதான கோவில்கள் சீரமைப்பு பணி! அமைச்சர் சேகர் பாபு ஆய்வு!

 பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

 அணைகட்டில் உள்ள புரதான கோவில் சீரமைப்பு பணிகளை  அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார்.

 இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மண்டலங்களில் நடைபெற்று வரும் திருப்பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள்  தலைமையில் நடைபெற்றது.

 கூட்டத்திற்கு வருகை புரிந்த அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களை  மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.

 இக்கூட்டத்தில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ப.கார்த்திகேயன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி அமுலுவிஜயன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை ஆணையாளர்  திரு.க.வீ.முரளீதரன், இ.ஆ.ப.,  வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப.,  மாநகராட்சி மேயர் திருமதி.சுஜாதா,  மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திரு.மு.பாபு, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமதி ந.திருமகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 அமைச்சர் அவர்கள் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் வெட்டுவானம் அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில் குளம் சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

 அதே போல் அணைக்கட்டு வட்டம் வெட்டுவானம் அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில் முடி காணிக்கை மண்டபம் அமைக்கும் பணிகள் குறித்தும் தொடர்ச்சியாக விரிஞ்சிபுரம் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத அருள்மிகு மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயில் திருப்பணி, அன்னதான கூடம் மற்றும் திருக்குளம் சீரமைப்பு ஆகிய பணிகளையும், பள்ளிகொண்டா அருள்மிகு ரங்கநாயகி உடனுறை ஸ்ரீ உத்திர ரங்கநாதர் சுவாமி திருக்கோயில் குளத்தினை தூர்வாருதல் குறித்தும், விரிஞ்சிபுரம் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத அருள்மிகு மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயில் திருக்குளம் சீரமைப்பு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.