இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த பூ பல்லக்கு திருவிழா! வேலூரில் விழா கோலம்!!

ஜி.கே.சேகரன்,

வேலூரில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பௌர்ணமி தினத்தில் 8 பூப்பல்லக்குகள் பவணி… ஒரு லட்சம் மக்களுக்கு மேலாக பங்கேற்பு!

வேலூர்மாவட்டம், வேலூரில் சித்திரை திருவிழா பௌர்ணமி தினத்தன்று ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம். கொரோனா தொற்றை காரணம் சொல்லி கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திருவிழா நடத்தப்படவில்லை.

 ஆனால் இந்த ஆண்டு சித்திரா பௌர்ணமி பூப்பல்லக்கு விழா சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த விழாவில் பல்வேறு இடங்களில் மேடைக் கச்சேரிகளும் நடைபெற்றன.

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி பல்லக்குகளில் ஜலகண்டீஸ்வரர் கோவில் பூப்பல்லக்கு ,செல்வ விநாயகர் ஆலய பூப்பல்லக்கு, தாரகேஸ்வரர் பூப்பல்லக்கு,விஷ்னு துர்கை பூப்பல்லக்கு,பெருமாள் கோவில் பூப்பல்லக்கு ,கனதுர்கை அம்மன் பூப்பல்லக்கு,வேம்புலி அம்மன் பூப்பல்லக்கு ,லஷ்மி நரசிம்மர் சாமி கோவில் பூப்பல்லக்கு ஆகிய எட்டு பூப்பல்லகுகள் அலங்கரிக்கப்பட்ட சுவாமிகளுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

 வான வேடிக்கை மற்றும் பல்வேறு மேளதாளங்களுடன் மண்டி வீதி, லாங்கு பஜார், கம்சரி பஜார்,பில்டர் பெட் சாலைவழியாக அண்ணாசாலையை அடைந்து, கோட்டை வெளி சாலையில் பூப்பல்லக்குகள் வந்தது.

இதில் தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என். மணிவண்ணன் தலைமையில் பாதுகாப்பு பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதேபோல் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.