அம்மா இருக்கும் போதேவா  அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டாங்க!சின்னத்திரை நடிகையின் கதறல்!

அம்மா இருக்கும் போதேவா  அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டாங்க!சின்னத்திரை நடிகையின் கதறல்!

டி.முகமது இர்பான்,

 அம்மா உடன் இருக்கும் போதேவா  அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டாங்க என்று சீரியல் நடிகை சிடுசிடுத்துள்ளார்.

 சின்னதிரையில் பிரபலாமான நடிகைகளில் ஒருவர் சுவாதி சர்மா. இவர் 'நினைத்தாலே இனிக்கும்' சீரியல் நடிகை ஆவார். இந்நிலையில் அவர் நேர்காணல் ஒன்றில் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

  முன்பெல்லாம், சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை குறித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்புவதும் வழக்கம். அந்த வகையில் பிரபல சீரியல் நடிகை தான் சந்தித்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளது பரவலாக்கப்பட்டு வருகிறது.

  இதே போல் சில மாதங்களுக்கு முன்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது முல்லையாக நடித்து வரும் லாவண்யா தன்னிடம் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டு அணுகியது குறித்து வெளிப்படையாக பேசி பரபரப்பைலேற்படுத்தினார்.

  அப்படியிருக்க ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் 'நினைத்தாலே இனிக்கும்' சீரியல் நடிகை சுவாதி சர்மா முதலில் கன்னட சீரியல்களில் நடித்து வந்தார். கண்டேயா கதே, துரோணா, பார்ச்சூனர் போன்ற சீரியல்களில் நடித்த இவர் ஜீ தமிழின் 'நினைத்தாலே இனிக்கும்' சீரியலின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். பொம்மி என்ற கேரக்டரில் இந்த சீரியலில் நடித்து வருகிறார்.

  நேர்காணல் ஒன்றில் பேசிய சுவாதி சர்மா, காலேஜ் படிப்பை முடித்ததும் மாடலிங் மூலமாக சினிமாவில் வாய்ப்பு தேடியுள்ளார். அப்போதெல்லாம் இவருடைய அம்மா தான் சுவாதியுடன் வாய்ப்பு தேடி போயுள்ளார். அந்த வகையில் வாய்ப்பு தேடி போன ஓரிடத்தில் அம்மா முன்பே ஒரு நபர் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசியுள்ளார். இதனால் அவருடைய அம்மா கடும் கோபம் அடைந்துள்ளார். சுவாதியும் அந்த நபரை கடுமையாக திட்டியுள்ளார்.

  பின்னர் வெளியில் வந்த பிறகு இதனால் தான் நடிப்பு வேண்டாம் என்றேன் என அவருடைய அம்மா ஸ்வாதி மீது ரொம்பவே கோபப்பட்டுள்ளார். அதன்பிறகு ரொம்ப கஷ்டப்பட்டு அம்மாவை சமாதானப்படுத்தி தற்போது நடித்து வருவதாக தெரிவித்துள்ளார் சுவாதி சர்மா.

   மேலும், இந்த நிகழ்வால் 'நினைத்தாலே இனிக்கும்' சீரியல் ஷுட்டிங்கிற்காக சென்னை வர ரொம்பவே பயந்தேன் என்றும் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அது சரி.