தலையை துண்டிப்பதாக இளம் நடிகைக்கு மிரட்டல்! வாணியம்பாடி வாலிபர் மீது புகார்?

தலையை துண்டிப்பதாக இளம் நடிகைக்கு மிரட்டல்! வாணியம்பாடி வாலிபர் மீது புகார்?

மா.ராஜ்குமார்,

 தன்னை பற்றி தவறான முறையில் கருத்து பதிவு செய்ததுடன், கொலை மிரட்டல் விட்ட நபர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம் நடிகை கதறி அழுதுள்ளார்!

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, மேட்டுப்பாளையத்தை பூர்வீகமாக கொண்டவர் தீபா அவருக்கு வயது 16.

அவர் தற்போது நடிப்புக்கா தீப்தீ என்று தனது பெர் மாற்றம் செய்து கொண்டு, கிரைம் சப்ஜெக்ட் கொண்ட குருதி சாரல் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்,

  மேலும் தற்போது திரைக்கு வெளிவர உள்ள தங்க முட்டை திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாக உள்ளார்.

  மேலும் ரோபோ சங்கருடன் நடித்துள்ளார்மதே போல் குருதி காதல், கற்க கற்க காதல், கர்மா, நான் நினைத்த நாள் போன்ற தமிழ் படங்களிலும் மற்றும் ஒரு தெலுங்கு படத்திலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

  இதற்கு முன்னர் புகையிலை தவிற்பு, பல்வேறு விழிப்புணர்வு, விவசாயிகள் விலை நிர்ணயம், மற்றும் பிள்ளைகள் படிப்பு குறித்தும், ஏழை வியாபாரிகளிடம் பேரம் பேசாதே என்ற அடிப்படையில் குடும்படங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

   இந்நிலையில் நடிகை தீப்தீ தனது படத்திற்காக எடுக்கப்பட்ட ஒரு போஸ்டரை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கிறார்.

  இதை விமர்சனம் செய்யும் வகையில் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியில் வசிக்கும் சசிகுமார் சுமதியின் மகன் பாலாஜி என்பவர் தவறான கருத்தை பதிவிட்டுள்ளார்.

  கருத்து என்ற பெயரில் தகாத வகையில் அவர் பதிவு செய்த்த நிலையில், அதற்கு பதில் பதிவாக உனது தாய், சகோதரி மற்றும் காதலியும் அப்படித்தான் என்றால் நானும் அப்படித்தான் என்று பதில் பதிவு செய்துள்ளார் தீப்தி. 

  இதனால் பாலாஜி  நடிகை தீப்திக்கொ கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

 அதில் ஊருக்கு வந்தால் தலையை எடுத்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்தும், ஆபாசமாக பதிவுகள் செய்துள்ளார் பாலாஜி.

 ஆகவே நடிகை தீப்தீ  தனக்கு கொலை மிரட்டல் விட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்துள்ளாராம்