மாணவிகளை வரவேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் கோடை விடுமறை முடிவடைந்து இன்று தொடங்கின. காலை முதல் மாணவ- மாணவிகள் பள்ளிகளுக்கு உற்சாகமாக வந்தனர்.
பழைய மாணவர்கள் தங்களது நண்பர்களை சுமார் ஒன்றரை மாதத்திற்குப்பின் சந்திக்கும் மகிழ்ச்சியுடனும், புதிய மாணவர்கள் புது இடங்கள் எப்படி இருக்கும் என்று நினைத்தவாறும் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விருகம்பாக்கத்தில் உள்ள அரசு மகளிர் பள்ளிக்கு சென்றார். அப்போது பள்ளிக்கு வருகை தந்த மாணவிகளை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அத்துடன் இலவச புத்தகங்களையும் வழங்கினார். மாணவ- மாணவிகளுக்கு இன்றே இலவச புத்தகம், சீருடைகளை வழங்குவது பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் புறப்பட்ட பள்ளிக்கூட பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் மீண்டும் ஏற்பட்டது!