கண்மாய் மீன் பாசி குத்தகை:- ஏலம் எடுத்த சிவில் இன்ஜினியர் வெட்டி கொலை!

கண்மாய் மீன் பாசி குத்தகை:- ஏலம் எடுத்த சிவில் இன்ஜினியர் வெட்டி கொலை!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,

 விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தை சேர்ந்தவர் வி.தர்மராஜ், இவர் சிவில் இன்ஜினியர். இவருக்கு மனைவியும் ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். இவர் ராஜபாளையம் வடக்கு பகுதியில் உள்ள ஆதியூர் கண்மாய் மீன் பாசி குத்தகை ஏலம் எடுத்து இருந்தா£.

 இதற்கு  காவலாளியாக பச்சை காலனி சேர்ந்த சமுத்திரம் என்பவரை நியமித்திருந்தார். காவலாளி சமுத்திரம் பல்வேறு முறைகேடான செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை திடீரென்று வேலை விட்டு விலகி விட்டார் தர்மராஜ்.

 ஆகவே இவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தன. இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் தர்மராஜ் தனக்கு கொலை மிரட்டல்கள், அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறி புகார் செய்திருந்தார்.

  இந்நிலையில் தர்மராஜ் சம்பவத்தன்று பிற்பகல் 12:30 மணியளவில் ஆதியூர் கண்மாய் சென்று பார்த்துக் கொண்டிருந்தார். அது சமயம் வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட சமுத்திரம் மற்றும் இருவர் அங்கு வந்து தர்மராஜுடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

 தகராறு முடிவில் தர்மராஜை பயங்கரமாக வெட்டி படுகொலை செய்து மூன்று பேரும் தப்பி விட்டனர். தகவல் கிடைத்தவுடன் ராஜபாளையம் வடக்கு ஆய்வாளர் பவுல் ஏசுதாசன், தெற்கு ஆய்வாளர் முரளிதரன் மற்றும் போலீஸ் படை குவிக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பட்டப் பகலில் நடைபெற்ற இக்கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.