சூப்பரா பணியாற்றினீங்க...சக அதிகாரிகளை பாராட்டிய திருநேல்வேலி எஸ்.பி.!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பாளார் என்.சில்பரசன் பாராட்டி சான்றுகள் வழங்கினார்.
குறிப்பாக எந்த ஒரு இடையூறு ஏற்படாத வகையில் சிறப்பான முறையில் பணிபுரிந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை பாராட்டினார்.
அதே போல், கொலை, திருட்டு மற்றும் போக்சோ வழக்குகளில் உள்ள சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எதிரிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த
காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உட்பட மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 40 பேரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.என்.சிலம்பரசன் அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கினார்.
மேலும் சிறப்பான முறையில் பணியாற்ற வாழ்த்துக்களை தெரிவித்தார்.