போக்குவரத்து துறை தனியார் வசமாகும் என்பது கட்டுக்கதை! அமைச்சர் சிவசங்கரன் பேச்சு!

ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் பல புதிய பேருந்துகளை துவக்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கரன்.
திருப்பத்தூர்.
போக்குவரத்து துறை தனியார் துறை ஆகும் என்பது கட்டுக்கதை அப்படி என்றால் எதற்காக இப்பொழுது இந்த புதிய பேருந்துகள் - நேர முறைப்படியும், குக்கிராமங்களுக்கும், பேருந்துகள் இயக்கபடுவதாலே தமிழகம் சமச்சீராக உள்ளது, திருப்பத்தூரில் நடைப்பெற்ற புதிய பேருந்து சேவை துவக்க விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சு
திருப்பத்தூர் மாவட்டம்,திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு 1 பேருந்தும், சென்னையிற்கு 2 பேருந்தும், மேல்பட்டியிற்கு 1 பேருந்தும், ஏலகிரி மலைக்கு 1 புதிய பேருந்து சேவையை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்து சிறிது தூரம் பேருந்தில் பயணம் செய்தார்.
மேலும் விழாவிற்கு முன்னதாக பேசிய, அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பழைய பேருந்துகளை மாற்றி புதியதாக 7 ஆயிரத்து 200 பேருந்துகள் புதுப்பித்து இயக்கப்பட உள்ளது. எதிர்கட்சியினர் புதிய பேருந்துகள் வரவில்லை எனக் கூறுகின்றனர்.
அவர்களின் பார்வைக்காகவே அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற புதிய பேருந்து சேவை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறையில், எந்த ஒரு புதிய பேருந்து ஓட்டுநர்களும், நடத்துனர்களும், பணிக்கு எடுக்கவில்லை,அதனாலேயே தற்போது, 2000 வழித்தடங்களில் ஓட்டுநர்கள் இல்லை,தற்போது ஓட்டுநர்கள் மற்றும் பணிக்கு தேர்வு நடைப்பெற்று புதியதாக ஓட்டுநர்கள் பணிக்கு சேர்ந்து வருகின்றனர்.
சில தொழிற்சங்கள், போக்குவரத்துறை தனியார் துறையாகும் என கூறுகிறார்கள், அது முற்றிலும் கட்டுக்கதை தனியார் துறை என்றால் எதற்கு இப்பொழுது இந்த புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன, என கேள்வி எழுப்பினார்.
கடந்த அதிமுக ஆட்சியால் நிதிசுமை அதிகமாகியுள்ளது, அதை சரிசெய்த பின்னர் போக்குவரத்து ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும், என தெரிவித்தார்.
மேலும் மற்ற மாநிலங்களை இல்லாத அளவில், நேர முறைப்படியும், குக்கிராம ங்களுக்கு, பேருந்து வசதி உள்ளதாலே தமிழகம் சமச்சீராக உள்ளது என தெரிவித்தார்.
இந்த விழாவில், மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், மற்றும் ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இராணிப்பேட்டை
இராணிப்பேட்டை மாவட்டத்தில் கூடுதலாக 5 வழித்தடங்களுக்கு புதிய பேருந்து சேவையினை அமைச்சர்கள் காந்தி, சிவசங்கரன் ஆகியோர் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தனர். சென்னை, பெங்களூரு, கலவை, சோளிங்கர், திருத்தணி, உள்ளிட்ட 5 வழித்தடங்களுக்கு புதிய பேருந்து சேவையை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி கலெக்டர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது.
இதில் கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு புதிய பேருந்துகளை கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.
முன்னதாக போக்குவரத்து துறை ஊழியர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் சிவசங்கரன், நேற்று 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களை அரசு பேருந்தில் ஏற்றாமல் சென்றது குறித்து வெளியான செய்தியை சுட்டிக்காட்டிய அவர், போக்குவரத்து துறை ஊழியர்கள் தங்களது குடும்பத்தின் நலனை கூட பொருட்படுத்தாமல் உழைத்து வருவதால் தான் தமிழகம் தலைசிறந்து விளங்குவதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் போக்குவரத்து துறையை சீரமைக்க முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதோடு, உரிய நிதி ஒதுக்குவதாக கூறினார்.
பிற மாநிலங்களில் சம்பளம் கேட்டு போராடினால் வேலையை விட்டு அனுப்பி விடுவதாக சுட்டிக்காட்டிய அவர், போக்குவரத்து ஊழியர்களுக்கு தேவையான அனைத்து சலுகைகளையும் கிடைக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளதாக தெரிவித்தார்.