திருப்பத்தூர் வேலூர் மாவட்டங்களில் ஆபத்தான கிருமி பரவுகிறதா?

திருப்பத்தூர் வேலூர் மாவட்டங்களில் ஆபத்தான கிருமி பரவுகிறதா?

 ஜி.கே.சேகரன்,

 வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆபத்தான கிருமிகள் பரவுவதாக கூறப்படுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகங்கள் சுகாதாரத்துறை அலுவலர்களை உஷார் படுத்தியிக்கிறது.

  திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம் மோட்டூர் ஊராட்சிக்குட்ட தொங்கனூர் பகுதியில் சுமார் 72 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மூன்று நாளைக்கு முன்பு ஒன்றரை வயது குழந்தை உட்பட ஐந்து பேருக்கு மேற்பட்ட நபர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

  பின்னர் பொதுமக்கள் சிகிச்சைகாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஒன்றரை வயது குழந்தை கிருஷ்ணகிரியில்  தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் 75 வயது மூதாட்டி கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  இதுகுறித்து தகவல் அறிந்து  மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில்உதவி இயக்குநர் ஊராட்சிகள் முருகன்,வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சித்ரசேனா,கந்திலி வட்டார வளர்ச்சி மருத்துவர் தீபா ஆகியோர் விரைந்து வந்து மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் சின்டெக்ஸ் டேங்க்கில் உள்ளே நீரை ஆய்வு செய்தனர்.

  மேலும் தண்ணீரை புதுப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் மருத்துவ குழுவினர் தொங்கனூர் பொது மக்களுக்க பரிசோதனை செய்து வயிற்றுப்போக்கு இருப்பவருக்கு மாத்திரைகளை வழங்கி வருகின்றனர்.

  மேலும் பொது மக்களிடம் விசாரித்த பொழுது ஊராட்சி நிர்வாகம்  சரிவரமேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் சின்டெக்ஸ் டேங்க் சுத்தம் செய்வதில்லை மேலும் ப்ளீச்சிங் பவுடரும் சரிவர போடுவதில்லை எனவும்

பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

ஆனால் தண்ணீரில் எந்த பிரச்சனையும் இல்லை, ஏதோ ஆபத்தான கிருமி பரவுவதாக கூறப்படுகிரது. 

 இந்நிலையில் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை காலத்தை ஒட்டி டெங்கு பரவல் தடுக்கும் விதமாக தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்!

 அப்போது அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் கால்வாய்களை முறையாக தூய்மை படத்தாமல் மற்றும் குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தாமல் நோய் தொற்று ஏற்படும் வகையில் இருப்பதை பார்த்து நகராட்சி ஆணையாளரை கடுமையாக கண்டித்தார்.

  பின்னர் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பஞ்சனம்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த பழைய இரும்புகடையில் தீடிர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது மழைநீர் பிளாஸ்டிக் மற்றும் தகரம் பொருட்களில் மழைநீர் தேங்கி உள்ளதை மற்றும் சுகாதார சீர்கேடு விளைவிக்கும் வகையில் இருப்பதைப் பார்த்து கடுமையாக எச்சரித்து உடனடியாக தூய்மை படுத்த உத்தரவு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 முன்னதாக வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த கீழ் சென்றத்தூர் கிராமத்தில் 15 க்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 இதனால் பலராமன் என்கிற 80 வயது முதியவர் உயிரிழந்தார் . குடிநீருடன் கழிவு நீர் கலந்ததால் ஏற்பட்ட பிரச்சனையா என மாவட்ட ஆட்சியர்சுப்பு லெட்சுமி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளியிடம் விசாரணை நடத்தினார்.

 .அந்த கிராமத்தில் தற்போது மருத்துவ குழுவினர் சுகாதார பணியில் ஈடுபட்டனர். கிராமத்தில் உள்ள பல பேருக்கு தற்போது மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள தண்ணீரில் ஏதாவது கலக்கப்பட்டதா என வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை.

  இவை குறித்து சுகாதாரத்துறை வட்டாரத்தில் விசாரித்த போது தண்ணீரால் இந்த பிரச்சனை இல்லை சுத்தம் சுகாதாரம் இல்லை. மற்றபடி ஆபத்தான கிருமிகள் எதுவும் பரவவில்லை என்றார்.