சிங்கபூரில் கஞ்சா வழக்கு:-தமிழருக்கு தூக்கு!!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
கிடுக்கிப்பிடி சட்டத்துக்கு பெயர் பெற்ற சிங்கப்பூரில் கஞ்சா கடத்தியதாக தங்கராஜி சுப்பையா(46) என்கிற தமிழருக்கு சாங்கி சிறைச்சாலையில் புதன்கிழமை அதிகாலை தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. இத்தனைக்கும் மரண தண்டனை வேண்டாம் என்று ஐ.நா. உள்பட உலகம் முழுவதும் இருந்து வந்த வேண்டுகோள்கள் மற்றும் எச்சரிக்கைகளை சிங்கப்பூர் அரசு கண்டுகொள்ளவேயில்லை.
இதுபற்றின விவரம் வருமாறு,
மேற்படி கஞ்சா வழக்கு விசாரணையின் போது தங்கராஜி சுப்பையா குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டது.
தூக்குத்தண்டனை நிறைவேற்றத்தை முன்னிட்டு, சாங்கி நகரின் கிழக்கில் உள்ள சிறைச்சாலையில் தங்கராஜ் சுப்பையாவின் உறவினர்கள் திரண்டிருந்தனர்.
தங்கராஜுவின் வாழ்க்கை, தூக்கு தண்டனையில் முடிந்தாலும் கூட சிங்கப்பூரின் சட்ட அமைப்பில் சீர்திருத்தங்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் என்று தங்கராஜின் குடும்பத்தினர் கூறிக்கொண்டிருந்தனர்.
வழக்கு விவரம்,
46 வயதான தங்கராஜு, 2013 ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 1 கிலோ கஞ்சாவை டெலிவரி செய்யும் சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டார்.
டெலிவரி செய்யும் போது அவர் பிடிபடவில்லை என்றாலும், அந்த கஞ்சா கைமாறும் செயல்பாட்டை ஒருங்கிணைக்கும் பொறுப்பை அவர் வகித்தார் என்று அரசு வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர். மேலும் தங்கராஜிக்காக டெலிவரி செய்த நபர் பயன்படுத்திய இரண்டு செல்பேசிகளும் விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபர் தாம் இல்லை என்று தங்கராஜு வாதிட்டார். தமது ஒரு செல்பேசி தொலைந்து போய் விட்டதாகவும் போலீஸார் கண்டுபிடித்த மற்றொரு செல்பேசி தன்னுடையது இல்லை என்றும் தங்கராஜு மறுத்தார்.
இதற்கிடையே 2018-ம் ஆண்டு தங்கராஜி சுப்பையா குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக அவரது குடும்பத்தினர் செய்த கடைசி நேர மேல் முறையீடுகளை சிங்கப்பூர் நீதிமன்றங்கள் நிராகரித்து விட்டன.
இந்த வழக்கில் தங்கராஜின் கடைசி மேல்முறையீட்டில், கஞ்சா டெலிவரியை ஒருங்கிணைக்கும் பொறுப்பை வகித்தது தங்கராஜி தான் என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்க முகாந்திரம் இருப்பதாக நீதிபதி கூறினார்.
இதனால் லேசான தண்டனைக்கு தங்கராஜி தகுதியற்றவர் ஆகிறார் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.