ஜெஹோவாஸ் விட்நெஸ் ஜெபக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு! பரபரப்பு தகவல்கள்!! குற்றவாளி சரண்! உள்துறை அமைச்சர் விசாரணை!

ம.பா.கெஜராஜ்,
கேரளாவில் செயல்படும் ஜெஹோவாஸ் விட்நெஸ் ஜெபக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்ட நிலையில், குற்றவாளி போலிசில் சரணட்ந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அதிகாரிகளுடன் த் ஈவிர ஆலோசனை நடத்தினார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு கேரளா, கொச்சி அருகேயுள்ள களமசேரியில் உள்ள ஜெஹோவாஸ் விட்நெஸ் ஜெபக்கூட்டத்தில் ஆராதனை தொடங்கிய சில நிமிடங்களில் பயங்கர சப்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது. ஜெபக்கூட்டத்தின் மத்திய பகுதி தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் வலது, இடதுபுறத்தில் மேலும் 2 குண்டுகள் வெடித்தன. ஆலயத்திலினுள் என்ன நடக்கிறது என்பது புரியவில்லை.
அனைவரும் வெளியே செல்ல முயற்சி செய்த போது, கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பலர் காயமடைந்தனர். ஜெபக்கூட்டம் நடைபெற்ற மையம் போர்க்களமாக காட்சியளித்தது.
போலீஸார் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த வெடிகுண்டு சம்ம்பவத்துக்கு டோமினிக் கார்ட்டின் என்பவர் பொறுப்பேற்று போலிசில் சரணடைந்தார்.
இந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
குறிப்பாக யூதர்களை அச்சுறுத்த இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்கிற கோணத்தில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மத்திய பிரதேச தேர்தல் களத்தில் உள்ள அவர், காணொலி வாயிலாக டெல்லியில் நடை பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். உள்துறை மூத்தஅதிகாரிகள், உளவுத் துறை அதிகாரிகள், பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் தொலைபேசியில் பேசிய அமித் ஷா, குண்டுவெடிப்பு தொடர்பான முழுவிவரங்களைக் கேட்டறிந்தார். தற்போது களமசேரி குண்டுவெடிப்பு தொடர்பாக கேரள போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) மாற்றப்படும் என்று தெரிகிறது.
களமசேரி ஜெபக்கூட்ட குண்டுவெடிப்பால் நாட்டின் அனைத்து மாநிலங்களின் போலீஸாரும் உஷார் நிலையில் உள்ளனர். குறிப்பாக நாட்டின் தலைநகர் டெல்லி, வர்த்தக தலைநகர் மும்பையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
களமசேரி குண்டுவெடிப்பு குறித்து அவர் கூறும்போது, "இது துரதிருஷ்டவசமான சம்பவம். இந்த குண்டுவெடிப்பை மிக தீவிர பிரச்சினையாக கருதுகிறோம். மாநில டிஜிபி, மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்று தெரிவித்தார்.
இராணுவத்தில் சேர மறுக்கு ஜெஹோவாஸ் விட்நெஸ் சபை!
அமெரிக்காவின் பென்சில்வேனியாவை சேர்ந்த ரசல் என்பவர் யெகோவாவின் சாட்சிகள் என்ற மத அமைப்பை கடந்த 1876-ம் ஆண்டில் தொடங்கினார். இந்த அமைப்புக்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. கடந்த 1912-ம் ஆண்டில் அமைப்பின் தலைவர் ரசல் கேரளாவின் திருவனந்தபுரத்துக்கு வருகை தந்தார். இதன்பிறகு கடந்த 1950-களில் யெகோவாவின் சாட்சிகள்சபை கேரளாவில் வளர்ச்சி அடைந்தது. தற்போது கேரளா முழுவதும் இந்த சபையில் 15,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் யெகோவாவின் சாட்சிகள் சபை சார்பில் ஆண்டுக்கு 3 முறைமிகப்பெரிய ஜெபக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாகவே தற்போது கொச்சிஅருகேயுள்ள களமசேரியில் 3 நாட்கள் ஜெபக்கூட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது.
இந்த சபையை சேர்ந்தவர்கள் யூதர்களின் கடவுளான யெகோவாவை முன்னிறுத்துகின்றனர். கிறிஸ்தவர்களின் வழிபாட்டு நடைமுறைகளில் இருந்து இவர்கள் முழுமையாக வேறுபடுகின்றனர். இந்த சபையை சேர்ந்தவர்கள் ராணுவம், காவல் துறையில் சேருவது கிடையாது. தேசிய கீதத்தை பாடுவது கிடையாது.
கடந்த 1985-ம் ஆண்டில் கேரளாவின் கோட்டயத்தில் உள்ள உள்ளியில் யெகோவாவின் சாட்சிகள் சபையை சேர்ந்த பினுமோல், பிந்து, இமானுவேல் ஆகிய மாணவ, மாணவியர் தேசிய கீதத்தை பாட மறுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றது.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், "பள்ளியில்தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது 3 பேரும் பணிவுடன் எழுந்து நின்று மரியாதை செலுத்தி உள்ளனர். அவர்களது மதவழக்கத்தின்படி தேசிய கீதத்தை பாடாமல் இருந்துள்ளனர். அமெரிக்கா, கனடா மற்றும் உலகம் முழுவதும் இந்த மதப்பிரிவினர் இவ்வாறே நடந்து கொள்கின்றனர். எனவே 3 பேரும் தேசிய கீதத்தை அவமதித்ததாக கருத முடியாது. அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும்" என்று தீர்ப்பளித்தது.
சர்வாதிகாரி ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் ஜெர்மனி முழுவதும் உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அந்த நாட்டை சேர்ந்த யெகோவா சாட்சிகள் சபையை சேர்ந்தவர்கள் ராணுவத்தில் சேர மறுத்துவிட்டனர். இதன்காரணமாக அந்த சபையை சேர்ந்த பலர் கொலை செய்யப்பட்டனர். அதன்பிறகும் அவர்கள் ராணுவத்தில் சேர மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் அந்த சபை மீது குண்டு போட்டிருக்கும் டோமினிக் மார்ட்டினிடம் மத்திய புலனாய்வு முகமைகள் துருவ உள்ளனர்.