எடப்பாடியின் கூத்தும் கும்மாளமும்! அமைச்சர் மா.சு.பேட்டி!

கு.அசோக்.
அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி சுகாதாரத்துறை மீது குறைகளை கூறுகிறார் அவருடன் நேரடியாக விவாதிக்க நான் தயார் அவரே இடத்தை தேர்வு செய்துசொல்லட்டும் விவாதிக்க நான் வருகிறேன் - அவருக்கு மருத்துவத்துறையில் குறை இருந்தால் ஒன்றிய அரசிடம் எடப்பாடி முறையிட வேண்டும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடுக்கம்பாறையில் பேட்டி!
வேலூர்மாவட்டம், வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பொய்கையில் புதியதாக கட்டப்பட்டுள்ள புற நோயாளிகள் பிரிவுகள் திறந்து வைத்தார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அத்துடன் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை நோயாளிகள் பிரிவுகள் வைட்டல் பே என்ற தனி பிரிவையும் திறந்து வைத்தார்.
¢ இவருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன் நந்தகுமார் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களையும் அமைச்சர் வழங்கினார்
பின்னர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா,சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் நேற்று மதுரையில் நேற்று நடந்த அதிமுக மாநாடு ஒரு நாடகம்! எடப்பாடி தான் நாடகம் நடத்துகிறார். அது அதிமுக மாநாடு அல்ல அது ஒரு கூத்தும் கும்மாளமாக இருந்தது. எடப்பாடி பழனிசாமி மருத்துவத்துறை பற்றி குறை கூறுவது எல்லாம் பொய் தான்.
நீட் தேர்வு குறித்து நாங்கள் பலமுறை எடுத்து சொல்லி வருகிறோம் இது மாணவர்களை பாதிக்கிறது என எனவே நாங்கள் நாடகம் நடத்தவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் மருத்துவத்துறையில் பல சாதனைகளை செய்து வருகிறோம் குறிப்பாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை புரிந்து நாட்டில் முதல் மாநிலமாக உள்ளோம், அவர்கள் 10 ஆண்டுகளில் பெற்ற விருதுகளை விட திமுக 2 ஆண்டுகளிலேயே அவர்கள் பெற்றதை விட அதிக விருதுகளை பெற்றுள்ளோம்.
குறிப்பாக 11 செவிலியர் கல்லூரிகள் தமிழகத்தில் 73 ஆண்டுகளில் ஒரே பல் மருத்துவக்கல்லூரி தான் இருந்தது தற்போது ஒரு பல் மருத்துவமனை கல்லூரியை துவங்கியுள்ளோம் தர சான்று அதிக அளவில் பெற்றுள்ளோம் எடப்பாடி பழனிசாமி குறை சொல்கிறார் அவருடன் நேரடியாக விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன் அவர் தயாரா புற்றுநோய் தடுப்பில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது சித்த மருந்துகளை அதிக அளவில் கொள்முதல் செய்து வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
குழந்தைகள் கடத்தல் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுவதை தடுக்க சிறப்பு கண்காணிப்புகள் செய்துள்ளோம் வேலூர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 150 கோடி தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் விரைவில் அடிக்கல் நாட்டவுள்ளார் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை குழந்தை கடத்தலில் தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவர்கள் செவிலியர்களிடமும் துறை ரீதியாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என கூறினார்.