அரசு மருத்துவமனை கழிவுகள் ஏரியில் கலப்பு! மறுசூழற்சி செய்ய ரூ.9 கோடி ஒதுக்கீடு!! சொன்னார் அமைச்சர்!!!

ஜி.கே.சேகரன்,
வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கழிவு நீர் சுத்திகரிப்பு செய்ய 9 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - கொரோனா காலத்தில் பணிபுரிந்த மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு கூடுதலாக ஐந்து மதிப்பெண்கள் அவர்கள் பணிபுரிந்த காலத்திற்கு ஏற்ப பிரித்து வழங்கப்படும் 197 கோடி செலவில் வேலூர் பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனை அதி நவீன மருத்துவமனையாக கட்ட தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார் - வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா,சுப்பிரமணியன் பேச்சு
வேலூர்மாவட்டம், வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் தமிழக சுகாதாரத்துறை மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு மருத்துவ படிப்பு முடித்த 104 மாணவ,மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார்,கார்த்திகேயன், அமுலு, கல்லூரியின் முதல்வர் பாப்பாத்தியம்மாள் ள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
இவ்விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மா,சுப்பிரமணியன் பேசுகையில், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரியில் தமிழகத்திலேயே முதல்முறையாக விட்டல் பே இங்கு துவங்கியுள்ளோம். இது எதிர்காலத்தில் தமிழகத்தில் பொதுமக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் வகையில் இருக்கும். இந்த மருத்துவக்கல்லூரியின் கழிவு நீர் ஏரியில் கலப்பதாக கூறினார்கள் அதனை மறுசூழற்சி செய்ய மருத்துவமனைக்கு ரூ.9 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
விரைவில் பணிகளை துவங்குவோம் மேலும், அனைக்கட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.5 கோடியில் கூடுதல் கட்டிடங்களை கட்டவும் நடவடிக்கை எடுகக்ப்பட்டுள்ளது. மேலும் பீஞ்சமந்தை அல்லேரி ஒடுக்கத்தூர் உள்ளிட்ட பல ஆரம்ப சுகாதார நிலையங்கள் இமாவட்டத்தில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கபடும்.
கொரோனா காலத்தில் பணிபுரிந்த மருத்துவர் செவிலியர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்குவதில் ஏற்கனவே 20 மதிப்பெண்கள் வழங்கப்பட்டது தற்போது கூடுதலாக ஐந்து மதிப்பெண்களை வழங்க தமிழக அரசாணையை வெளியிட்டது மேலும் கொரோனா காலத்தில் பணிபுரிந்தவர்கள், அவர்கள் பணிபுரிந்ததற்கு ஏற்ப மதிப்பெண்கள் பிரித்து வழங்கப்படும்.
சுகாதாரத்துறை மிகசிறப்பாக தமிழ்நாட்டில் செயல்பட்டு பல பாராட்டுகளை பெற்று வருகிறது பணி நியமனங்கள் சிறந்த திறந்த நிலையில் எந்த ஒளிவும் மறைவும் இன்றி நியமிக்கபடுகிறது.
வேலூரில் அதி நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய அரசு பெண்ட்லேண்ட் மருத்துவமனை ரூ.197கோடி செலவில் தமிழக முதல்வர் காணொளி மூலம் அடிக்கல் நாட்டுகிறார். மருத்துவ மாணவர்கள் நீங்கள் மக்கள் நலனில் அக்கறையுடன் சமுதாயத்திற்கு சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் மீண்டும் அயல் நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது இதில் மருத்துவ வல்லுநர்கள் கூறியதை போல் நாம் வைரஸ்களுடன் வாழ பழகிகொள்ள வேண்டும் என பேசினார்.