எடப்பாடி பழனிச்சாமி மெகா கூட்டணி அமைப்பாராம்! சொல்கிறார் கே.பி.முனிசாமி!!

டி.இ.முகமது
எடப்பாடி பழனிச்சாமி மெகா கூட்டணி அமைப்பார் என்று கே.பி.முனிசாமி செய்தியாளர்களிடம் சொன்னார்.
அவர் தெரித்ததாவது, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி, ஆழ்ந்த அரசியல் அனுபவம் வாய்ந்தவராக உள்ளார். ஏற்கனவே அவர் கூறியபடி மெகா கூட்டணி அமைத்து, தேர்தலில் வெற்றி பெறுவார்.
டிடிவி தினகரன் தரம் தாழ்ந்த மனிதர். அவரை பற்றி பேச விரும்பவில்லை.' திமுக கூட்டணி தொகுதி பங்கீடு முடியும் நிலையில், உங்களது கூட்டணிக்கு யாரும் வரவில்லை, அப்படியிருக்க எப்படி மெகா கூட்டணி அமைப்பார்? என்கிற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இறுதியாக எடுக்கும் நடவடிக்கை வாயிலாக அது குறித்து தெரிவிப்போம்.
ஓ.பன்னீர்செல்வம் இரண்டு முறை முதல்வராக இருந்தவர். ஜெயலலிதா போட்ட பிச்சையில், பொது வாழ்க்கையில் இந்த இடத்திற்கு வந்தவர். உச்சநீதிமன்றம் உள்பட அனைத்து நீதிமன்றங்களிலும், எடப்பாடி பழனிசாமி தான் பொதுச்செயலாளர் என்றும், இரட்டை இலை அவருடையது எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு பிறகும் ஓபிஎஸ் உளறிக்கொண்டிருக்கிறார். அவர் யாரை ஏமாற்ற நினைக்கிறார்? என்று தெரியவில்லை என்று சொன்னார்.