அதிமுக தொண்டர்களின் நாடி நரம்புகளை புடைக்க வைக்கும் "இரட்டை இலை" பாடல்கள்!

அதிமுக தொண்டர்களின் நாடி நரம்புகளை புடைக்க வைக்கும்
: :

ம.பா.கெஜராஜ்,

 அதிமுக-வின் சின்னமான இரட்டை இலை குறித்த பாடல்கள் மிகவும் பிரபலம். அந்த பாடல்களை கேட்டதும் அதிமுக தொண்டர்களின் நாடி நரம்புகள் புடைக்கும். 

"வாசல் எங்கும் இரட்டை இலை கோலமிடுங்கள்" மற்றும் "இரட்டை இலை வெற்றி தந்த இலை உயர் லட்சியம் காத்திட வந்த இலை" என்கிற அந்த பாடல்கள் தேர்தல் காலங்களில் பட்டி தொட்டிகளில் எல்லாம் ஒலிக்கும்.

 1970-களில் திரைப்பட பாடல்களுக்கு இணையாக தமிழகத்தை கலக்கிய ஒரு பாடல் மெல்லிசை மன்னன் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், கணீர் குரலோன் டி.எம்.சவுந்தர்ராஜன் பாட உதயமானது தான் '"இரட்டை இலை தந்த வெற்றி இலை" பாடல். அந்த பாடலில்,

திமுக அரசை மறைமுகமாக சாடியும், தங்கள் கட்சி ஏழைகளின் பசியாற்றும் இலையாக இருக்கும் என்றெல்லாம் வரிகள் இடம் பெற்றிருந்தன.

  புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., அவரைத் தொடர்ந்து செல்வி.ஜெயலலிதா என  அக்கால தேர்தல்களில் இந்த பாடல்கள் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து பயன்படுத்தப்பட்டும் வருகிறது.

  தற்போதைய டிஜிட்டல் காலத்தில் வாக்கு சேகரிப்புக்காக, எத்தனையோ மிக்சிங் பாடல்கள் ஒலிக்கப்பட்டு வந்தாலும்  கூட, தமிழகத்தின் கிராமங்கள், நகரங்கள் என மக்கள் மனதில் பதிந்துவிட்ட இந்த இரட்டை சின்னம் பாடல்களை வாக்காளர்கள் இன்னமும் மனதில் நிலை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.