அரசு கொடுத்த மாத்திரையால் மாணவி இறந்தாரா? ஃபுட் பாய்சன் காரணமா?!

க.பாலகுரு,
அரசு கொடுத்த மாத்திரையால் மாணவி இறந்தாரா அல்லது ஃபுட் பாய்சன் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும், ஒரு வயது முதல் 19 வயது வரையுள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு குடற்புழுக்களால் ஏற்படும் இரத்த சோகை, உடல் சோர்வு, மனச்சோர்வு, மூளை வளர்ச்சி குன்றுதல் போன்ற பாதிப்பு ஏற்படாமல் குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு, அனைத்துக் குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை நேற்று பிப் 10-ல் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதி பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரத்துறை மூலம் வழங்கப்பட்ட மாத்திரையை சாப்பிட்ட 7 வகுப்பு பயின்ற கவிபாலா என்ற மாணவி உயிரிழந்தார்.
மேலும் மூன்று குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையறிந்த மாணவியின் பெற்றோ£,¢ உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது சம்பந்தமாக சேதுவா சத்திரம் காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மறியல் கைவிடப்பட்டது.
பள்ளி மாணவியின் உடல் பிரோத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதால் அந்த முடிவு வந்த பின்னரே உயிரிழந்த பள்ளி மாணவி குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிட்டதால் இறந்தாரா இல்லை வேறு ஏதாவது ஃபுட் பாய்சன் ஏற்பட்டு உயிரிழந்தாரா என்ன காரணம் என உண்மை தெரியவரும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!