திடீரென மக்கள் பிரச்சனையில் தலைகாட்டிய தேமுதிக!

திடீரென மக்கள் பிரச்சனையில் தலைகாட்டிய தேமுதிக!

 ஜி.கே.சேகரன்,

 பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தியும், கல்லூரி மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தேமுதிக மாவட்டச் செயலாளர் அரிகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் சம்பவத்தை  கண்டித்தும், பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தியும் மற்றும் தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை தடுக்க வலியுறுத்தி தேமுதிக கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து  கோரிக்கை மனுவை தேமுதிக கட்சி நிர்வாகிகள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள்.

  அதே போல் இராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் ராணிப்பேட்டை தேமுதிக சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூபாய் ஆயிரத்தை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும், அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வன்கொடுமையை கண்டித்தும் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலுவற்றி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இதில்  தேமுதிக நிர்வாகிகள்  தொண்டர்கள் என ஏராளமான கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.