வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர் வீட்டில் அஞ்சலி செலுத்திய DIG!

ஜி.கே.சேகரன்,
தீவிரவாத தாக்குதலில் பலியான வீரர்களின் வீடுகளுக்கே சென்று அஞ்சலி செலுத்தும் திட்டம் இந்த ஆண்டு துவங்கப்பட்ட நிலையில், அந்த வகையில் 1998 ஆம் ஆண்டு, தீவிரவாத தாக்குதலில் பலியான வீரரின் நினைவு தினமான இன்று சி.ஆர் பி.எப் டி.ஐஜி அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
வேலூர்மாவட்டம், பென்னாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலு, இவர் 1994 ஆம் ஆண்டு சி.ஆர் பி.எப் பாதுகாப்பு படையில் சேர்ந்தார்.
பின்னர் 1998 ஆம் ஆண்டு ஜுலை 10 ஆம் நாள் ஆந்திர பிரதேசத்தில் பாசாரவில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கியிருப்பதை அறிந்து அவர்களை பிடிக்க வேலு அடங்கிய வீரர்கள் சென்றனர்.
அப்போது மாவோயிஸ்டுகள் குண்டு வீசியும், துப்பாக்கி சூடும் நடத்தினர். அப்போது துணிச்சலாக எதிரியை தாக்கிய போது 8 பேர் வீரமரணம் அடைந்தனர். அவர்களில் மேற்படி வேலுவும் ஒருவர்.
இது போன்ற உயிர் தியாகம் செய்யும் வீரர்களுக்கு மத்திய அரசு இந்த மார்ச் மாதம் முதல் சிறப்பு மரியாதை செய்யும் திட்டத்தை அறிவித்திருக்கிறது.
அந்த வகையில், மேற்படி வேலூர், பென்னாத்தூர் சேர்ந்த வீரர் வீரமரணமடைந்த நினைவு நாளில் அவரது வீட்டுக்கு நேரில் சென்று பென்னாத்தூரில் சி.ஆர் பி.எப் டி.ஐஜி தினகரன் நேரில் வந்து வேலுவின் தாயார் பச்சையம்மாளுக்கு ஆறுதல் கூறியதுடன் அங்கு அலகரித்து வைக்கப்பட்ட வேலுவின் படத்திற்கு சி.ஆர்பி எப் வீரர்கள் மற்றும் டி.ஐஜி தினகரன் மற்றும் பொதுமக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளும் அஞ்சலியை செலுத்தினார்கள்.