பீர் பாட்டிலால் அடித்து கொலை!

பீர் பாட்டிலால் அடித்து கொலை!

கு.அசோக்.

வேலூர்  வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் 24. இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியனுக்கும் ஜெயபிரகாசுக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

 இந்த நிலையில் ஜெயபிரகாஷ் பாண்டியன் வீட்டில் இரவு கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது. இதை கண்ட பாண்டியன் மற்றும் நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து ஜெயபிரகாஷை தாக்கி அவரது தலையில் பீர் பாட்டிலால் அடித்ததில் ஜெயபிரகாஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்திருக்கிறார்.

 ரத்த வெள்ளத்தில் இருந்த ஜெயபிரகாஷை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்த நிலையில் இன்று ஜெயபிரகாஷ் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

 இந்த சம்பவம் குறித்து வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஜெயபிரகாஷை தாக்கிய  வசந்த், தனுஷ், இரண்டு பேரை கைது செய்த காவல்துறையினர்.

மேலும் இருவரை தேடி வருகின்றனர்.