அண்ணன் மகனைக் காண சிஎம்சி மருத்துவமனைக்கு வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

ஜி.கே.சேகரன்,
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மு க அழகிரி யின் மகன் துரை தயாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்
வேலூர்மாவட்டம்கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அழகிரி மகன் துரை தயாநிதி உடல்நல குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிஎம்சி மருத்துவமனையில் ஏ பிளாக் ஐ சி யு பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுமார் இரண்டு மாதங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டதில் துரைதயாநிதி குணமடைந்து வருகிறார்.
இந்த நிலையில் முதல்வரின் சகோதரி செல்வி அவர்கள் இன்று காலை சிஎம்சி மருத்துவமனைக்கு வந்து துரை தயாநிதியை சந்தித்த நலம் விசாரித்துள்ளார்.
துரை தயாநிதியின் உடல் நலம் முன்னேறி நடந்து செல்வதை கண்ட அவர் முதல்வரிடம் இந்தத் தகவலை கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் சபரீசன் ஆகியோர் துரை தயாநிதியை நேரில் காண்பதற்காக சிஎம்சி மருத்துவமனைக்கு மாலை 6 மணிக்கு வந்தனர்.
அங்கு துரை தயாநிதியை முதலமைச்சர் சந்தித்து நலம் விசாரித்ததுடன் மருத்துவர்களிடம் மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
எப்போது பூரண குணமடைவார் என்பது குறித்தும் விசாரித்தார்.அரை மணி நேர சந்திப்பிற்கு சிஎம்சி மருத்துவமனையில் இருந்து முதல்வர் சென்னைக்கு புறப்பட்டார். முதல்வர் வருகையால் சி எம் சி மருத்துவ மனையில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
வெடிகுண்டு சோதனை மற்றும் மோப்ப நாய்களைக் கொண்டும் சோதனையில் ஈடுபட்டனர்.மேலும் மருத்துவமனைக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன் மற்றும் நந்தகுமார் ஆகியோரும் வந்திருந்தனர்.
கடந்த மாதம் இரண்டாம் தேதி தமிழக முதல்வர் சிஎம்சி மருத்துவமனைக்கு நேரில் வந்து துரை தயாநிதியின் சிகிச்சை குறித்தும் உடல் நலம் குறித்தும் நேரில் விசாரித்தார் .
அதை அடுத்து இன்று இரண்டாவது முறையாக மருத்துவமனைக்கு முதல்வர் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது