இரண்டு ஆளுநர்கள் தங்கக் கோவிலில் வழிபாடு!

இரண்டு ஆளுநர்கள் தங்கக் கோவிலில் வழிபாடு!

 கு.அசோக்,

  நாராயணி தங்க்கோவில் வளாகத்தில் 32 ஆம் ஆண்டை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் இயற்கை காலநிலை மாற்றங்கள் ஏற்படாமல் இருக்கவும், விவசாயம் செழிக்கவும், நாராயணி மூல மந்திர யாகம் நடத்தப்பட்டது. இதில் அசாம் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா,கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட் ஆகியோர் பங்கேற்று வழிபட்டனர்.

   வேலூர்மாவட்டம்,வேலூரில் நாராயணி தங்க கோவில் வ்ளாகத்தில் 32 ஆம் ஆண்டு ஆண்டுவிழாவும் ஸ்ரீ நாராயணி மூல மந்திர மகா யாகத்திலும்  அசாம்  ஆளுநர்  குலாப் சந்த் கட்டாரியா மற்றும் கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக ஆண்டு விழாவை முன்னிட்டு நாராயணி பள்ளியிலிருந்து மேளதாளங்கள் முழங்க 10008 மஞ்சள் குட நீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.

நாராயணி பழைய ஆலயத்தில் பொதுமக்கள் தங்களின் கைகளாலேயே அபிஷேகம் செய்தனர் அனைவருக்கும் ஆலய பிரசாதம் வழங்கப்பட்டது .

சக்தியம்மாவும் அபிஷேகங்கள் செய்து தீபாராதனைகளை செய்தார், இந்த விழாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள்  கலந்துகொண்டு உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் கால நிலை மாற்றம் ஏற்படாமல் இருக்க இயற்கை அருள்புரிய வேண்டியும் விவசாயம் செழிக்கவும் வழிபாடுகளை செய்தனர்.

இதில் திரளானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.