அரசியல் கற்க அயல்நாடு செல்லும் அண்ணாமலை! ஆறு மாதம் லண்டனில் தங்குகிறார்!!

அரசியல் கற்க அயல்நாடு செல்லும் அண்ணாமலை! ஆறு மாதம்  லண்டனில்  தங்குகிறார்!!

 ம.பா.கெஜராஜ்,

 செய்தியாளர்கள் உட்பட அரசியல் கட்சியினரிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அவர் ஆறு மாதங்களுக்கு லண்டனில் தங்கி அரசியல் பயிற்சி பெற உள்ளார்.

 இந்தியாவைச் சேர்ந்த 12 பேருக்கு அரசியல் பயிற்சி அளிக்க லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வாய்ப்பு அளித்திருக்கிறது.

 அரசியல் பயில்வதற்கான ஃபெலோஷிப் திட்டத்தில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த 12 பேரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் ஒருவர். இதற்கான விசா பணிகள் முடிவடைந்த நிலையில், அவர் விரைவில் லண்டன் செல்கிறார்.

 அவரது வெளிநாடு பயணத்தின் போது கட்சியின் அமைப்பு ரீதியான பணிகளை, தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகன் கவனித்துக் கொள்வார் எனவும்,

லண்டனில் இருந்தபடியே கட்சியின் பணிகளையும் அண்ணாமலை கவனித்துக் கொள்வார் எனவும் தெரிகிறது.

 தமிழக பாஜக தலைவர் பதவி ஆறு மாதம் காலியாக இருந்தது இது முதல் தடவையல்ல, ஏற்கனவே தமிழிசைக்கு பிறகு 6 மாதங்களுக்கு மேலாக தமிழக பாஜக, தலைவர் இல்லாமல் செயல்பட்டு வந்தது. அதற்கு பின்னர் தான் எல்.முருகனை அந்த பதவிக்கு நியமித்தனர்.

 இந்நிலையில்  பாஜகவில் தேசிய அளவில் நிர்வாகிகள் நியமனம் தொடர்பான பணிகள் நடந்து வருகிறது. இந்தநிலையில், அமித்ஷாவுடன் தமிழிசை சந்தித்து சிரித்து பேசும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.