அதிபருக்கு சூன்யம் வைத்த பெண் அமைச்சர்!

அதிபருக்கு சூன்யம் வைத்த பெண் அமைச்சர்!

ம.பா.கெஜராஜ்,

மாலத்தீவு அதிபர் முகமது முய்சுக்கு சூன்யம் வைத்த பெண் அமைச்சரையும் அவரது இரண்டு சகோதரர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

 இந்தியாவுக்கு மிக அருகே அமைந்துள்ளது மாலத்தீவு. அங்கு முகமது முய்சு அதிபராக உள்ளார். இந்நிலையில் அவரது உடல்நிலை சீர்குலைவதற்காக அந்நாட்டு பெண் அமைச்சர் ஃபாத்திமா ஷம்னாஸ் சலீம்   சூனியம் வைத்துள்ளார்.

  இதற்கு அவரது இரண்டு சகோதரர்களும் உடந்தையாக இருந்துள்ளார்கள்.

மாலத்தீவின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சராக இருந்தவர் ஃபாத்திமா ஷம்னாஸ். அப்படியிருக்க அதிபர் முகமது முய்சுவுக்கும், பாத்திமத் ஷம்னாஸுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

  இதனால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க அதிபர் முகமது முய்சு திட்டமிட்டிருந்தார்.

 இதையறிந்த ஃபாத்திமா ஷம்னாஸ் முகமது முய்சுவுக்கு எதிராக சூனியம் வைத்து சிக்கிக்கொண்டார். உடன் அவரது சகோதர்கள் இருவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

  மாலத்தீவு நாடு முஸ்லிம் நாடாக இருப்பினும் அங்கு தங்களுக்கு பிடிக்காதவர்களை முடக்குவதற்காக சூனியம் வைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் அதற்கு அரசு தடைவிதித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.