சாமியாரின் மடியில் இளம் பெண்...வன்மம் கக்கியவருக்கு ஜாமின் மறுப்பு!

ஜி.சாந்தகுமார்,
சாமியாரின் மடியில் பர்தா அணிந்த இளம் பெண் அமர்ந்திருப்பது போலவும், அந்த பெண்ணை சாமியார் கட்டி அனைத்திருப்பது போல் ஒரு படத்தை கடந்த 10 ஆம் தேதி கோகுல் என்பவர் பதிவிட்டு அதில் அருவருக்கத்தக்க வாசகங்களை இணைத்திருந்தார்.
இந்த பதிவை பார்த்த அப்பகுதியினரும், இஸ்லாமியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் இந்து, முஸ்லீம் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில், சமூக வலைதளங்களில் தவறான, அருவருக்கத்தக்க பதிவுகளை பதிவு செய்த கோகுல் என்பவரை, கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர்.
மேலும் சென்னை மாநகர காவல் ஆணையர், சென்னை தெற்கு காவல் இணை ஆணையர் ஆகியோரிடம் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் பழவந்தாங்கல் காவல் நிலையத்தில், மதக் கலவரத்தை தூண்டும் வகையில் எழுதுவது, மத உணர்வுகளை தூண்டுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கோகுல் நாயுடுவை கைது செய்தனர்.
பின்னர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அப்படியிருக்க கோகுல் நாயுடு ஜாமீன் கோரி, ஆலந்தூர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அவரது ஜாமீன் மனு இதுவரை மூன்று முறை விசாரணைக்கு வந்தும், மூன்று முறையும் நீதிமன்றம் ஜாமீன் தர மறுத்து விட்டது.
கோகுல் நாயுடுவுக்கு ஜாமின் வழங்க கூடாது என ஏற்கனவே சிலர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கோகுல் என்பவர் சென்னை நங்கநல்லூர், கனிகா காலனியைச் சேர்ந்தவர். பாஜகவில் மாவட்ட செயலாளராக உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அவர் மீது கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை!?