பாதியில் நின்ற லிப்ட்...குடிக்க தண்ணீர் இல்லாத மாநகராட்சி!

பாதியில் நின்ற லிப்ட்...குடிக்க தண்ணீர் இல்லாத மாநகராட்சி!

கு.அசோக்,

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் லிப்ட் பாதியிலேயே நின்றதால்  பொதுமக்கள் அவதி.மாநகராட்சி அலுவலகத்தில் தண்ணீர் குடிப்பதற்காக வைக்கப்பட்ட பானையில் குடிநீர் இல்லாததால் பொதுமக்கள் வேதனை.

   வேலூர் மாவட்டம் (இன்ஃபான்ட்ரி) சாலையில் வேலூர் மாநகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்த அலுவலகத்தில் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், மற்றும் வரி கட்டுதல், இ சேவை மையம், நில அளவு பிரிவு அலுவலகம் என பல்வேறு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

  இந்த அலுவலகத்திற்கு நாள்தோறும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என வந்து செல்கின்றனர்.

 அப்படி முக்கியமான அலுவலகமாக செயல்பட்டு வரக்கூடிய அதன் உள்ளே இரண்டு ( மின் தூக்கிகள்,  லிப்ட்  ) செயல்பட்டு வருகிறது.

  இதில் நேற்று இரண்டாவது மின் தூக்கி பாதிலேயே நின்றதால் அச்சமடைந்து பொதுமக்கள் அலறினர் பின்னர் அதன் பின்புறம் இருந்த எமர்ஜென்சி அலாட் அடிக்கப்பட்டதால் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் எமர்ஜென்சி சாவியை வைத்து திறந்து மின் தூக்கில் மாட்டிக் கொண்ட நபர்கள் வெளியே வரவழைத்தனர்.

  பின்பு அங்கு வந்த மின்தூக்கி பழுது சீரமைக்கும் ஊழியர்கள், மின் தூக்கி பழுதான காரணம் குறித்து ஆய்வு செய்து பார்த்த பிறகு அந்த மின் தூக்கியில் அதிக நபர்கள் ஏறியதால் மின்தூக்கி பாதியிலேயே  நின்று இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

  பின்பு மின் தூக்கியும் உடனடியாக நிறுத்தி பழுதான மின் தூக்கியை சீரமைத்தனர்.

 மேலும் வேறு ஏதேனும் பழுது இருந்தால் அதையும் சீர் செய்து முறையாக வழிமுறைக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

   அதே  போன்று வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி தாண்டி வெப்பமானது பதிவாகி வருகிறது இந்த நிலையில் மாநகராட்சி அலுவலகத்திற்கு முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் என பல்வேறு பணிக்காக வந்து செல்லக்கூடிய இடத்தில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அவஸ்த்தை ஏற்பட்டுள்ளது.

  ஊரெல்லாம் தண்ணீர் பந்தல் அமைக்கும் நல்லவர்கள் அப்படியே மாநகராட்சியிலும் வைத்து உதவலாமே?