அரசு பள்ளி ஆசிரியை ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

அரசு பள்ளி ஆசிரியை ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

 கு.அசோக்,

குடும்ப தகராறில் அரசு பள்ளி ஆசிரியை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரம், பெரியார் நகர் பகுதியை சேர்ந்த திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சதாசிவம்.

 இவர் அதே பகுதியில் கணினி மையம் நடத்திவருகிறார். இவருக்கும் பல்லலப்பள்ளி பகுதியைச் சார்ந்த ரங்கநாதன் மகள் அனிதா(38)இவர் 10 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு பெரியார் நகர் பகுதியில் குடியிருந்து வருகின்றனர்.

 அனிதா குனிச்சி மோட்டூர் பகுதியில் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 

  நேற்று இரவு நீண்ட நேரம் ஆகியும் கணவர் சதாசிவம் வீட்டுக்கு வராததால் ஆசிரியை அனிதா போன் செய்துள்ளார்.

  அப்போது ஃபோனில் சண்டை முற்றவே ஒரு கட்டத்தில் சதாசிவம் போனை துண்டித்தார்.

  இதனால் ஏமாற்றம் அடைந்த  ஆசிரியை அனிதா கிருஷ்ணகிரி மேம்பாலம் அருகே கன்னியா குமரியில் இருந்து புனே வரை செல்லக்கூடிய அதி விரைவு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

   இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிதறி கிடந்த உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  வழக்கு பதிவு செய்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.