ஆடு மேய்க்கும் பெண் ரூ.1 கோடி ஜி.எஸ்.டி. வரி பாக்கியம்! 1000-ம் கோடியை தாண்டும் மோசடி!! மத்திய புலனாய்வு குழு தலையிட கோரிக்கை!

  ஆடு மேய்க்கும் பெண் ரூ.1 கோடி ஜி.எஸ்.டி. வரி பாக்கியம்! 1000-ம் கோடியை தாண்டும் மோசடி!! மத்திய புலனாய்வு குழு தலையிட கோரிக்கை!

ம.பா.கெஜராஜ்,

 சி.சங்கீதா.(33), சிவராஜ் நகர், பேர்னாம்பட்டு,வேலூர்மாவட்டம் என்கிற முகவரியைச் சேர்ந்தவருக்கு வரி விதிப்பு அலுவலகத்திலுருந்து ஒரு நோட்டிஸ் வந்திருக்கிறது. அதில் சங்கீதா ஒரு கோடியே பன்னிரென்டு லட்சத்து ஐம்பத்தி ஒராயிரத்து ஆறு நூற்று முப்பத்தியோரு ரூபாய் ஜிஎஸ்டி பாக்கி வைத்திருப்பதாகவும் அதை திரும்ப செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

  இது தொடர்பாக சங்கீதா வேலூர் எஸ்.பி.நெ.மணிவண்ணை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார்.

 அந்த புகார் மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது, எனக்கே தெரியாமல் என் பெயரில் மோசடியாக E.A. Creations  என்கிற நிறுவனம் துவங்கி ரூ.11251631/- (ஒரு கோடியே பன்னிரென்டு லட்சத்து ஐம்பத்தி ஒராயிரத்து ஆறு நூற்று முப்பத்தியோரு ரூபாய்) அளவுக்கு நான் ஜி எஸ் டி வரி ஏய்ப்பு செய்ததாக, என் பெயரில் மோசடி செய்திருக்கும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, இந்த பிரச்சனையிலிருந்து என்னை விடுவிக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி இந்த புகார் மனுவை அளிக்கிறேன்.

 என் தந்தை இறந்துவிட்ட நிலையில் என் தாய் மற்றும் அண்ணன் பராமரிப்பில் உள்ளேன். நான் தற்போது ஆடு மேய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். எனக்கு 30.10.2023 ஆம் தேதியன்று, சென்னையிலுள்ள மாநில வரி விதிப்பு வேப்பேரி துணை ஆணையர் அலுவலகத்திலிருந்து பதிவஞ்சலில் ஒருகடிதம் வந்தது. அதை வாங்கி படித்துப் பார்த்ததும் அதிர்சியுற்றேன். அதில் நான் கடந்த 2019 ஆம் ஆண்டு E.A. Creations என்கிற நிறுவனத்தை தொடங்கி, பேர்னாம்பட்டு சாத்கர் பகுதியைச் சேர்ந்த சுதா என்பவரது   நெ.10. ஆரணி முத்து முதலி தெரு, பெரியமேடு, சென்னை 600003 என்கிற முகவரியில் இயங்கியதாக கூறப்படும் Tvl. Sri Internationalஎன்கிற நிறுவனத்துடன் வியாபார ரீதியாக கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொண்ட வகையில்  ரூ.11251631/- வரி பாக்கி உள்ளதாகவும் அதை திருப்ப பெற நடவடிக்கை எடுக்கும் பொருட்டு இந்த அறிவிப்பு அளிக்கப்படுகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 சாதாரண குடும்பத்தில் பிறந்த ஏழை பெண்ணான நான் இதுவரையில் எந்த நிறுவனத்தையும் தொடங்கவில்லை என்கிற போது, மற்றுமொறு நிறுவனத்துடன் வியாபார ரீதியாக கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொண்ட வகையில் ஜி.எஸ்.டி வரிபாக்கி என்று குறிப்பிட்டிருப்பதற்கும் எனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. என்னுடைய ஆதார் கார்டு எண் மற்றும் பான் கார்டு எண்களை எனக்கே தெரியாமல் சமூக விரோதிகள் யாரோ திருட்டுதனமாக எடுத்து, என் பெயரில் E.A. Creations போலி நிறுவனத்தை துவங்கி ஜிஎஸ்.டி வரி ஏய்ப்பு செய்து என்னை இந்த வரி ஏய்ப்பு விஷயத்தில் சிக்க வைத்திருக்கிறார்கள்.

   மேற்படி மாநில வரி விதிப்பு உதவி ஆணையர் அவர்கள் கடிதத்தை வாசித்து பார்த்த பின்னர் என்னுடைய பான் எண்ணை ஆன்லைன் வாயிலாக சோதனை செய்த போது நெ.18/18, லைன் 2 வது தெரு, வானாபாடி, இராணிப்பேட்டை என்கிற முகவரியில் என் பெயரில் மோசடியாக  E.A. Creations தொடங்கியதாக கூறப்பட்டுள்ள விவரங்களை அறிந்தேன். அதே போல் எனக்கு வந்த கடித நகல் நெ.101, கல்லிபேட்டை, சாத்கர், பேர்னாம்பட்டு, வேலூர் மாவட்டம் என்கிற முகவரியை சேர்ந்த சுதா என்பவருக்கும் அனுப்பப்பட்டிருப்பதை அறிந்தேன். அது தொடர்பாக நான் ஆன்லைனில் சோதனையிட்ட போது அவர்நெ.10. ஆரணி முத்து முதலி தெரு, பெரியமேடு, சென்னை 600003 என்கிற முகவரியில் Tvl. Sri International நிறுவனத்தை நடத்திவந்ததாக தெரியவந்தது.

  அய்யா அவர்கள் எனக்கே தெரியாமல் என்னுடைய ஆதார் மற்றும் பான் கார்டு எண்களை திருட்டுதனமாக எடுத்து அதனை வைத்து என் பெயரில் போலி நிறுவனம் துவங்கி வரிஏய்ப்பு செய்திருக்கும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, சம்மந்தப்பட்ட மோசடி நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், என்னை இந்த பிரச்சனையிலிருந்து விடுவிக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தாழ்மையுடம் கேட்டுக் கொள்கிறேன் என் அபுகாரில் தெரிவித்துள்ளார்.

 இந்நிலையில், போலிசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று சங்கீதா கடந்த பத்து நாட்களுக்கு மேலாக காத்துக்கொண்டிருக்கிறார்.

   ஏற்கனவே ஆம்பூர்,வாணியம்பாடி,திருப்பத்தூர்,தென்காசி,மதுரை கோவை,ஓசூர்,ராணிப்பேட்டை,பெங்களூர் உள்ளிட்ட பல பகுதிகளில் போலி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு அதில் பல லட்ச ரூபாய் வணிகம் நடைபெற்றதாக கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது மேலும் அந்த நிறுவனங்கள் பழைய இரும்பு வியாபாரம், பிளாஸ்டிக் வியாபாரம், கட்டுமான நிறுவனம்,மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் என பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் கடந்த மாதம் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதியிடம்  புகார் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கினர்.

அப்போது விசாரணையில் பல தகவல்கள் தெரியவந்தது.

   கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பேர்ணாம்பட்டை சேர்ந்த ஒரு நபர் குடியாத்தம் பகுதியில் உள்ள பீடி மற்றும் பல்வேறு கூலி தொழில் செய்பவர்களிடம் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்து தருவதாகவும் ஆம்பூரில் உள்ள ஒருவர் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து உங்களுக்கு தமிழக அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற்று தருவார் என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.

  அதனை நம்பி அந்த கூலி தொழிலாளர்கள் விண்ணப்ப படிவம், ஆதார்கார்டு,பான்கார்டு மற்றும் செல்போன் எண்ணை கொடுத்துள்ளனர் அதுபோல் ஏராளமானவர்களிடம் பெற்றுச் சென்று குறிப்பிட்ட நபரிடம் கொடுத்துள்ளார்.அந்த குறிப்பிட்ட நபர் அப்பாவி தொழிலாளர்களின் ஆதார்கார்டு மற்றும் பான்கார்டு ஆகியவைகள் மூலம் மோசடியான நபர்களுக்கு அதனை கொடுத்து அதனை வைத்து பல்வேறு போலி நிறுவனங்கள் தொடங்க ஜிஎஸ்டி நம்பர் பெறப்பட்டு அதன் மூலம் பல கோடி ரூபாய்க்காண வியாபாரம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

 இதனால் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு மூலம் கிடைக்க வேண்டிய மகளிர் உரிமை திட்ட ஆயிரம் ரூபாய் கிடைக்கப்பெறவில்லை, ஏனெனில்  பல கோடி டர்ன் ஓவர்செய்து பல லட்சம்ஜிஎஸ்டி ரூபாய் கட்டாமல் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.

குடியாத்தம் டவுன் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக பேர்ணாம்பட்டு வீராசாமி தெருவை சேர்ந்த சசிகுமார் வயது 26,கிஷோர் வயது 25, முஸ்தாஜ் வயது 25 ஆகிய மூன்று பேர் மீது வழக்கு செய்தனர். இவர்கள் பொதுமக்களிடம் ஆதார் அட்டை,பான்கார்டு உள்ளிட்டவைகளை பெற்று மோசடி நபர்களுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது அந்த மோசடி நிறுவனங்கள் தொடங்கிய நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் மாவட்டம் மட்டுமன்றி மாநில முழுவதும் பல்வேறு ஊர்களில் இதே போல் தொழிலாளர்களின் ஆதார் அட்டை,பான்கார்டு உள்ளிட்டவை வைத்து நூற்றுக்கணக்கான போலி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

   மேற்படி வழக்கு பதிவு செய்யப்பட்ட  சசிகுமார், கிஷோர், முஸ்தாஜ் ஆகிய மூன்று பேர் தொடர்புடையவர்களிடம் போலிசார் விசாரித்த போது இதற்கு மூளையாக செய்பட்ட சில அரசியல்வாதிகளைப் பற்றி தகவல்கள் கூறியிருக்கிறார்கள்.

   ஆனால் அதை போலிசார் கண்டு கொள்ளவில்லையாம். அதில் பேர்னாம்பட்டில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பிரமுகராக இருக்கும் ஒரு குறிப்பிட்ட நபரை பற்றி போலிசாரிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  இதை அந்த நிர்வாகி வேப்பம் பிடித்த கையோடு பெங்களூருவுக்கு பறந்துவிட்டார். அங்கு டேரா போட்டுக்கொண்படியே ஜிஎஸ்டியில் பிராடு தனங்களை செய்து வருகிறாராம். சமீபத்தில் கூட அவரது மனைவியின் பெயரில் ஒருகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து வாங்கினாராம்.

   அதே போல் ரவுடி ஒருவரும் கோடிக்கணக்காக சொத்துக்களை இதே முறையில் வாங்கி குவித்து வருகிறார். அவருக்கு பிணாமியாக உள்ளவனுக்கே ரூ.ஒரு கோடியில் இடம் வாங்கி கொடுத்திருக்கிறாராம்.

   இந்த விஷயம் தொடர்பாக போலிசார் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சட்டத்தின் பிடியை மேலும் இறுக்க மத்திய புலனாய்பு பிரிவுகளை அனுக சிலர் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

  ஏன்னா இந்த மோசடியில் பல அதிகாரிகளும் உடந்தையாம்.

  இன்னும் நிறைய தகவல்கள் உள்ளது, அவை சேகரித்து வெளியிடப்படும்.