6 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தது ஏமாற்று வேலையாம்! பாஜக மாநில செயலாளர் சொல்கிறார்!

ஜி.கே.சேகரன்,
காங்கிரஸ் எம்பி வீட்டில் ரூ.300 கோடிக்கு மேலாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து ஊழல்பற்றி பேசும் காங்கிரஸ் தான் பதில் சொல்ல வேண்டும் - புயல் நிவாரணமாக ரூ.6 ஆயிரம் கொடுப்பதாக திமுக அரசு அறிவித்துள்ளது ஏமாற்று வேலை வேலூரில் பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி பேட்டி.
வேலூர்மாவட்டம், வேலூரில் உள்ள பாரதியஜனதா கட்சியின் அலுவலகத்தில் பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், டிசம்பர் 6 ஆம் தேதி காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி சாகுவின் வீட்டில் அனைத்து வணிக தளங்களிலும் ரெய்ட் நடத்தப்பட்டு, 300-கோடிக்கும் மேலாக பணம் கைப்பற்றப்பட்டது.
இதுவரையில் இந்தியாவிலேயே ரெய்ட் நடத்தி கைப்பற்றப்பட்ட பணம் இது தான் அதிக அளவு பணமாகும்.
இது ஒடிசாவில் காங்கிரஸ் ராஜ்ய சபா எம்பியின் என்ன ஒரு நிலை என்றால் ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர் அவர் ராகுல் காந்தி யாத்திரைக்கு தேவையானதை செய்தவர் ஆனால் சாதாரண ராஜ்ய சபா எம்பி மதுபான நிறுவனம் வைத்து குடியை கொடுத்து மக்களை காப்பாற்றுகிறார் போல் உள்ளது.
பண மதிப்பிழப்பின் மூலம் ஊழல்வாதிகளின் பணம் வெளிகொண்டுவரப்பட்டது. ஆனால் தற்போது இந்த காங்கிரஸ் எம்பியின் அதிக பணம் குறித்து காங்கிரஸ் அமைதிகாக்கிறது. இதற்கு நிச்சயமாக காங்கிரஸ் பதில் சொல்ல வேண்டும். இந்திய பிரதமர் எல்லா நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் இருந்தாலும் இந்தியாவை காப்பாற்றினா£.¢ ஆனால் இவ்வளவு பணம் குறித்து கணக்கில் வராதது குறித்து காங்கிரஸ் தான் சொல்ல வேண்டும்.
இந்தியா கூட்டணியின் ஒரே உள் நோக்கம், கொள்கையும் கிடையாது ஒன்றும் கிடையாது. இதன் நோக்கம் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டும் என்பது தான். ஆனால் மக்கள் மோடியை விரும்புகின்றனர் அவரின் வார்த்தையை நம்புகின்றனர்.
எந்த இடைதரகரும் இல்லாமல் உண்மையான பயனாளிகள் பயனடையும் வகையில் நலதிட்டங்கள் வங்கி கணக்கில் மோடி பரிவர்த்தனையை செய்து மக்களுக்கு நலதிட்டம் செய்கிறார். ஆனால் காங்கிரஸ் திமுக இந்தியா தேசத்தின் கூட்டுகொள்ளை அடிக்கவே கூட்டணியாக உள்ளது. நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வியடைந்தது இதற்கு காரணம். உதயநிதியின் சனாதன பேச்சுதான் காரணம்.
இண்டியா கூட்டணி என்ன ஆனது? பிரதமர் எல்லா நாடுகளிலும் ஏற்கும் வகையில் சிறுதானிய வகைகள் அறிமுகம் செய்து நல்ல விஷயங்களை செய்கிறார், ஆனால் வெள்ளையனை விரட்டிய பின் காங்கிரஸ் வெள்ளைகாரன் கொள்ளையடிக்கிறான் நாம் ஏன் கொள்ளையடிக்க கூடாது என கொள்ளையடித்தனர். புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரேஷன் அட்டை கூட இல்லாமல் 6 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தது என்பது குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக அறிவித்ததை போல் ஏமாற்று வேலை தான்.
மக்கள் பலர் இறந்தனர் இதற்கு 6 ஆயிரம் கொடுத்தால் சரியாகிவிடுமா? மக்கள் பணியை நாங்கள் செய்வோம் என சொன்னவர்கள் ஏன் புயல் பாதிப்பின் போது நேரில் வரவில்லை என மக்கள் கேட்கின்றனா.¢ முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் நாடகம் தான் திமுகவின் வேலை என கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட தலைவர் மனோகரன் அவர்களும், மாவட்ட பொதுச் செயலாளர் .ஜெகன்நாதன் , அரசு தொடர்பு மாவட்ட தலைவர் வெங்கடேசன், பிரச்சார பிரிவு தலைவர் செந்தில், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.