சட்டமன்றத்தில் பெண்களுக்கு 50 சதவிகிதம்  இட ஒதுக்கீடு! துரைமுருகன் பரபரப்பு! அமைச்சர் காந்தி.... எம்பி நிதி வழங்கினர்!

சட்டமன்றத்தில் பெண்களுக்கு 50 சதவிகிதம்  இட ஒதுக்கீடு!  துரைமுருகன் பரபரப்பு! அமைச்சர் காந்தி.... எம்பி நிதி வழங்கினர்!

ஜி.கே.சேகரன்,

 தமிழ்நாடு சட்டமன்றத்தில் பெண்களுக்கு 50 சதவிகிதம்  இட ஒதுக்கீடு செய்யபோகிறோம் மத்திய அரசும் பெண்களுக்கு 50 இட ஒதுக்கீடு வழங்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் பேச்சு.

 அதே போல் இராணிப்பேட்டையில் நடந்த விழாவில் அமைச்சர் ஆர்.காந்தியும், திருப்பத்தூரில் நடைபெற்ற விழாவில் திருவண்ணாமலை எம்.பி.சி.என். அண்ணாதுரையும் பங்கேற்று மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு நிதி வழங்கி பேசினார்கள்.

 வேலூர்மாவட்டம்,

 காட்பாடியில் மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி தலைமையில் நடைபெற்றது.

 இதில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 8600-க்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு சுமார் ரூ.66 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.

 விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்தி,அமுலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

   இவ்விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் இந்தியாவிலேயே பெண்களுக்கு உள்ளாட்சிகளில் 33 சதவிகித இட ஒதுக்கீட்டை முதன் முதலாக வழங்கினோம். பின்னர் அது 50 சதவிகித மாக உயர்த்தப்பட்டுள்ளது. பெண்கள் முன்னேற்றமடைய வேண்டும் என்று நினைக்கும் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் 50 சதவிகிதம் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளோம்.

   இதே போல் மத்திய அரசும் பெண்களுக்கு 50 சதவிகிதம் ஒதுக்கீடு அளிக்க முன் வரவேண்டும். பெண்கள் முன்னேற்றமடைந்தால் அந்த நாடு முன்னேற்றம் அடையும். இந்த கடனுதவி தொகையை பெற்று சுய தொழில்களை செய்து முன்னேற்றமடைய வேண்டுமென பேசினா.ர் இவ்விழாவில் ஆயிரக்கணக்கான மகளிர்கள் பங்கேற்றனர்.

இராணிப்பேட்டை மாவட்டம்,

வேப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 604 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 58 கோடியே 16 லட்சத்தில் வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா தலைமை தாங்கினா£. ¢மேலும் இந்நிகழ்ச்சியில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் .ஈஸ்வரப்பன் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் , அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 திருப்பத்தூர் மாவட்டம்,

அதே போல், திருப்பத்தூர் மாவட்டத்தில் 460 மகளிர் குழுக்களை சேர்ந்த 6280  பயனாளிகளுக்கு 45.91 கோடி மதிப்பிலான  வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட  ஆட்சியர்  தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது  

 மாவட்டத்தில் உள்ள 460 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 6280 பயனாளிகளுக்கு ரூபாய் 45.91 கோடி மதிப்புள்ளான வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை  திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என்.அண்ணாதுரை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்து கொண்டு வழங்கினார்.

 மாவட்டஊரக பகுதிகளில் 6.ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 294 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 32.57.கோடி நேரடி வங்கி கடன் மாவட்ட நகர்புற பகுதிகளில் உள்ள 116 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 10.63 வங்கி நேரடி  கடன் வழங்கப்பட்டது.

  அப்போது திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் பேசுகையில் தமிழகத்தில் முதல் முதலில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் ஆட்சியில் பெண்களுக்கு  சுய உதவி குழுக்கள் மூலமாக வங்கி கடன் வழங்கப்பட்டது பின்னர் படிப்படியாக இந்தியா முழுவதும் பெண்களுக்கு சுய உதவி குழு மூலமாக வங்கி கடன் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

  இந்நிலையில் கடந்த பத்து ஆண்டு காலத்தில் அதிமுக ஆட்சியில் பெகளுக்கு எந்த ஒரு நலதிட்டங்களும் சுய உதவி குழுக்களுக்கு  வங்கி கடன் வழங்க வில்லை மீண்டும் நம்ப நல்லாட்சியில்  பெண்களுக்கு   வங்கி கடன் மாற்று நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றது.

  இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உமா மகேஸ்வரி .மற்றும் திட்ட இயக்குநர். தனபதி திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் ஜோலார் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்லவனாதன் மற்றும் துறை சேர்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.