லாரியை மடக்கி பணம் பறிக்க முயன்ற இந்துமகா சபை நிர்வாகி உட்பட 3 பேர் கைது!

லாரியை மடக்கி பணம் பறிக்க முயன்ற இந்துமகா சபை நிர்வாகி உட்பட 3 பேர் கைது!

ஜி.கே.சேகரன்,

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில் பகுதியில் ஜெய்பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான கண்டெய்னர் லாரியில் 42 மாடுகளை ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டு இருந்தது. இவை ஆந்திரா மாநிலம் கடப்பாவில் இருந்து கொண்டுவரப்பட்டது.

 லாரியை திண்டுக்கல் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஒட்டிச்சென்றார். அப்போது லாரி வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில் பகுதி கடந்து செல்லும் போது, இந்து மகாசபா முன்னாள் நிர்வாகி ஜெகன் என்பவர் லாரியை மடக்கி நிறுத்தி லாரியில் என்ன இருக்கிறது என்று விசாரணை மேற்கொண்டார்.

 பின்னர் அதில் மாடுகள் இருப்பதை அறிந்து லாரியை சாலை ஓரம் நிறுத்தி ஓட்டுனரிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார்.

 அவருக்கு ஆதரவாக அவருடைய நண்பர்கள் கார்த்திக் மற்றும் மணியரசு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்ததால் செய்வதரியாத லாரி ஒட்டுநர் 100 எண்ணுக்கு கால் செய்து உதவி நாடினார்.

 இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அம்பலூர் போலீஸார் மாடுகளை ஏற்றிச்சென்ற லாரி ஓட்டுனரின் பணம் பறிக்கும் நோக்கத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

 விசாரணையில், கொலை மற்றும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஜெகன் என்பவரும் அவருடை நண்பர்கள் 2 பேர் என தெரிய வந்தது.

  மேலும் காவல் துறையினர் விசாரணையில் தேசிய நெடுஞ்சாலையில் மாடுகளை ஏற்றி செல்லும் லாரி ஒட்டுனர்களிடம் தொடர்ந்து பணம் பறிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிய வந்தது.

 இதனை தொடர்ந்து இந்து மகாசபா முன்னாள் நிர்வாகி ஜெகன், அவருடைய நண்பர்கள் கார்த்திக், மனியரசு ஆகிய

3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

  இந்து மகாசபா முன்னாள் நிர்வாகி ஜெகன் மீது கொலை மற்றும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது