தமிழகத்திலுள்ள  இலங்கையின் தம்ரோ பர்னிச்சர் கடையை முற்றுகையிட்ட இயக்கத்தினர்!

தமிழகத்திலுள்ள  இலங்கையின் தம்ரோ பர்னிச்சர் கடையை முற்றுகையிட்ட இயக்கத்தினர்!

கு.அசோக்,

 தமிழக மீனவர்கள் தொடர் படுகொலையை கண்டித்து வேலூரில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில்  -தம்ரோ பர்னீச்சர் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் ஷெரீப் தலைமை தாங்கினார். மே 17 இயக்க ஒருங்கிணைபாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோ பங்கேற்றனர்.

 இலங்கை கடற்படையினரால் இதுவரையில் 650 தமிழக மீனவர்கள் சுட்டுகொல்லப்பட்டுள்ளனர் ஆனால் இதுகுறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் கத்தார் நாட்டில் உளவு பார்த்த முன்னாள் இந்திய அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட போது மத்திய அரசு விரைந்து அவர்களை காப்பாற்றியது.

 மேலும் குஜராத் மீனவர் பாகிஸ்தான் கடற்படையால் சுட்டுகொல்லப்பட்ட போது அதனை கொலை வழக்காக பதிவு செய்தனர்.

 ஆனால் இதுவரையில் 650 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுகொல்லப்பட்டும் கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், இந்தியா இலங்கை கச்சதீவு ஒப்பந்தபடி மீன்பிடி உரிமையை வழங்க கோரியும், சிங்களவர்களுக்கு சொந்தமான தம்ரோ பர்னீச்சர் கடையை முற்றுகையிட்டு திரளானோர் கோஷங்களை எழுப்பினார்கள்.

 இதில் மே 17 இயக்க ஒருங்கிணைபாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.