மகாராஷ்டிராவில் முதல்வர் வேட்பாளர்கள் யார்?! தேர்தலுக்கு பின்னர் ஸ்டண்ட்!

மகாராஷ்டிராவில் முதல்வர் வேட்பாளர்கள் யார்?! தேர்தலுக்கு பின்னர் ஸ்டண்ட்!

ம.பா.கெஜராஜ்,

 மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு வரும் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இங்கு மொத்தம் 288  சட்டமன்ற தொகுதிகள் உள்ள ஷிலையில் ஆளும் மகாயுதி மற்றும் எதிர்க்கட்சிகளின் எம்விஏ கூட்டணிக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

 ஆனாலும் கூட முதல்வர் வேட்பாளர் யார் என இரு முனைகளும் அறிவிக்கவில்லை என்றாலும் கூட, எம்விஏ கூட்டணியில் சிவசேனாவின் (யூபிடி) உத்தவ் தாக்கரேவும், மகா யுதியில் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவும் முதல்வர் வேட்பாளர்கள் என வாக்காளர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

 ஆனால் தேர்தல் முடிவுக்குப் பிறகு முதல்வர் யார் என்பது முடிவு செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த தெரிவித்துள்ளார்.

 இதுபோல, தேசியவாத காங்கிரஸின் சரத் பவாரும் எம்விஏ பற்றி ஒரு கருத்தைக் கூறியுள்ளார். இதன்மூலம் அடுத்த முதல்வர் யார் என்பதில் அந்த கூட்டணிக்குள் சிறு மன சங்கடங்கள் இருந்து வருகின்றன.

 அப்படியிருக்க மகா யுதி கூட்டணியில் அதிகபட்சமாக பாஜக 153 தொகுதியில் போட்டியிடுகிறது. இதனால், தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக்க பாஜக விரும்புகிறது. ஆனால், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அதற்கு இசைவாரா தெரியாது.

 எம்விஏவிலும் இதை நிலை தான். தங்கள் கட்சிக்காக முதல்வர் பதவியை குறி வைக்கிறது காங்கிரஸ்.

 அதே போல் தான், தங்களுக்கும் முதல்வர் பதவி கிடைக்கும் என என்சிபி தலைவர் சரத் பவார் கருதுகிறார்.  அதையே, சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அதிரடி பாணியில் முதல்வர் சீட்டை கேட்டு பெற திட்டமிடுகிறார்.

  இதனால், தேர்தலுக்குப் பிறகு பல ஸ்டண்ட் காட்சிகள் நடைபெறும் என்பதில் அய்யமில்லை.