அம்மா மருந்தகத்துக்கு பதில் முதல்வர் மருந்தகமா? வேண்டவே வேண்டாம் என்று போராட்டம்!

அம்மா மருந்தகத்துக்கு பதில் முதல்வர் மருந்தகமா? வேண்டவே வேண்டாம் என்று போராட்டம்!

ஜி.கே.சேகரன்,

கூட்டுறவு சங்கங்கம் மூலம் நஷ்டத்தை விளைவிக்கும் திட்டங்களை கட்டாய படுத்தி அமுல்படுத்துவதை கைவிட கோ£க்கை எழுந்திருக்கிறது.  இந்நிலையில் மாநில தொடக்க கூட்டுறவு பணியாளர் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

 மாநிலம் முழுவதும் மனு கொடுக்கும் போராட்டத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் மனு அளித்தனர்.

  மாவட்ட செயலாளர் தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்ற அதில் கடந்த 2021 ஆம் ஆண்டு கடனை தள்ளுபடி செய்து அறிவித்ததை இதுவரையில் அந்த சங்கங்களுக்கு தள்ளுபடி முழு தொகையையும் வழங்கவில்லை.

 இதனால் சங்கங்கள் பெரும் நிதி இழப்பை சந்தித்து வருகிறது.

  மேலும் சில ஆண்டுகளாக செலவீணங்களுக்கு உரிய மாணிய தொகை வழங்கவில்லை. இதனால் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத அவல நிலையும் உள்ளது. மேலும் கூட்டுறவு சங்க செயலாளர்களை அச்சுறுத்தி டிராக்டர் நெல் அறுவடை இயந்திரம் போன்றவைகளை பயன்படுத்த வாய்ப்பில்லாத சங்கங்கள் அதனை அமுல்படுத்தவும் மேலும் கடந்த காலங்களில் அம்மா மருந்தகம் துவங்கி நஷ்டம் சந்தித்தது.

  தற்போது அதனை முதல்வர் மருந்தகம் என பெயர் மாற்றி அமுல்படுத்த அச்சுறுத்தி வருவதாகவும் எனவே இத்திட்டங்களை கைவிட வேண்டும்.  நஷ்டங்களுக்கு எதிர்காலத்தில் ஊழியர்கள் பணியாளர்களை பொறுப்பாக்கி வாழ்வாதாரம் பாதிக்கும்.

  எனவே இதனை கைவிட வேண்டும் இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தனர்.